Advertisment

பவன் கல்யாண் மீது மதுரையில் புகார்

Complaint against Pawan Kalyan in Madurai

Advertisment

நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

நேற்று பவன் கல்யாண்திறந்தவெளி வேனில் பேசுகையில், ''சனாதன தர்மம் என்பது ஒரு வைரஸ் என சொல்கிறார்கள். நிறைய பேர் இப்படி சொல்லி இருக்காங்க. நீங்க முதல் நபர் அல்ல நீங்கள் கடைசி நபரும் அல்ல. சனாதன தர்மம் ஒரு வைரஸ் அதை நான் நாசம் செய்யப் போகிறேன் என்றெல்லாம் சொல்லாதீர்கள். உங்கள மாதிரி ஆளுங்க வந்து இருக்காங்க போயிருக்காங்க. சனாதனம் தர்மத்திற்கு எதுவுமே ஆகாது. நான் சொல்கிறேன். கடவுளோட பிளஸ்ஸிங் வாங்கிவிட்டு சொல்கிறேன் உங்களால சனாதனத்தை எதுவுமே பண்ண முடியாது'' என்றார்.

பவன் கல்யாண் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் 'லெட்ஸ் வெயிட் அண்ட் சி' என்று பதிலளித்துவிட்டு சென்றார். இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஒருமையில் பேசி இரு மாநிலத்தின் இடையே பகை உருவாக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். எனவே பவன் கல்யாண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

sanathanam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe