Skip to main content

சிதம்பரம் அருகே ஊராட்சி தலைவரைச் செயல்படவிடாமல் தடுக்கும் துணைத்தலைவர் மீது புகார்!

Published on 09/11/2020 | Edited on 09/11/2020

 

Complaint against the deputy leader who prevented the panchayat leader from acting near Chidambaram!

 

சிதம்பரம் அருகே கீழதிருக்கழிபாலை ஊராட்சி மன்றத் தலைவரைச் செயல்படவிடாமல் தடுக்கும் அதே ஊராட்சி துணைத்தலைவர் மீது பரங்கிப்பேட்டை ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் மாவட்ட துணைச்செயலாளர் ஜெயசீலன், சிறப்புத் தலைவர் சிவசங்கரி ராம்மகேஷ், ஒன்றியக் கூட்டமைப்பு துணைத் தலைவர் இளவரசு, செயலாளர் மரகதம், நஞ்சமகத்து வாழ்கை ஊராட்சி தலைவர் ராஜகுமாரி, கீழ்அனுவம்பட்டு ஊராட்சி தலைவர் மாரியம்மாள், டி.எஸ்.பேட்டை தலைவர் மோகன்காந்தி இவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

அந்த மனுவில், பரங்கிப்பேட்டை ஒன்றியம் கீழத்திருக்கழிபாலை ஊராட்சி மன்றத் தலைவராக சுழற்சி முறையில் ஆதிதிராவிடப் பெண்ணுக்கு ஒதுக்கியதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். தற்போது எங்கள் ஊராட்சியின் துணைத் தலைவராக உள்ள லட்சுமணன் (மாற்றுச் சமூகம்) தேர்தலின்போது எனக்கு எதிராக அவரின் ஆதரவு வேட்பாளரை நிறுத்தினார். அவர் தோல்வியடைந்த ஆத்திரத்தில் தேர்தல் முடிந்ததுமுதல் என்னிடம் விரோதமாகவும், என்னை ஜனநாயகப் பூர்வமாக, சுதந்திரமாக மக்களுக்கான பணி செய்யவிடாமலும் தடுத்து வருகிறார். மேலும், ஆணாதிக்க சிந்தனையுடன் அணுகும் போக்குடன் செயல்படுகிறார்.

கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஊராட்சியில் உள்ள பள்ளிக் கூடங்களில் என்னைக் கொடியேற்றக் கூடாது என மறைமுகமாகப் பேசியது மட்டுமல்லாமல் அவரும் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். கிராமசபைக் கூட்டத்தை தான் சொல்லும் இடத்தில்தான் நடத்த வேண்டும் எனத் தொடர்ந்து கட்டாயப்படுத்தி வருகிறார்.

 

Complaint against the deputy leader who prevented the panchayat leader from acting near Chidambaram!


அவர் சொல்லுகின்ற பணிகளை தான் தீர்மானம் போடவேண்டும் என்றும் எந்தப் பணிகள் நடந்தாலும் அந்தப் பணிகளுக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் PFMS-ல் கையொப்பம் இடாமல் அலையவிடுகிறார். மேலும், எங்கே வேலை நடந்ததென தெரியாது எனக்கூறி அலைக்கழிப்பார். 10 ஏழைக் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய கோழிகளை அவருக்குச் சொந்தமான 7 குடும்பங்களுக்கு வழங்கவேண்டும் என யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல், கால்நடை மருத்துவரிடம் பயனாளிகளை தேர்வு செய்து கொடுத்துவிட்டார். இதுகுறித்து கேட்டபோது ”உன்னால் என்ன முடியுமோ அதை செய்துகொள்” என அலட்சியமாகக் கூறினார்.

அவர் சொல்லும் நபர்களுக்குத்தான் பணித்தளப் பொறுப்பாளர் பணி வழங்கவேண்டும் எனத் தொடர்ந்து நிர்பந்தம் செய்துவருகிறார். அவர் சொல்வதை மறுக்கவே ”குப்பையில் கிடந்ததெல்லாம் பதவிக்கு வந்தால் இப்படிதான் ஆடும், இரு இரு ஆட்டத்தை நிறுத்திவிடுகிறேன்” என நேரிடையாகக் கேவலமாகப் பேசுகிறார்.

அவர்  கேட்கும் கமிஷனைக் கொடுக்கவில்லை என்பதாலும், அவர் சொல்வதைக் கேட்கவில்லையென்பதாலும் நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமாகி வருகிறது. அவரை மீறி ஜனநாயக ரீதியில் நான் செயல்படத் துவங்கியதால், கடந்த நவம்பர் 6 ஆம் தேதியன்று 100 நாள் வேலையில் இருந்த பெண்களைப் பொய் சொல்லி அழைத்துவந்து, எனக்கு எதிராகப் பொய்யான குற்றச் சாட்டுகளைச் சொல்லி ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

cnc


பணிதளத்தில் 100 நாள் வேலை செய்யும் பெண்களை இப்படிச் சட்டவிரோதமாக தனது சுய நலத்திற்காகப் போராடத் தூண்டியுள்ளார். எனவே என்னை சுதந்திரமாகச் செயல்படவிடாமலும், அதிகாரத்தை வைத்து கமிஷன் கேட்டு மிரட்டுவதும், பெண் என்பதால் ஆணாதிக்க சிந்தனையுடன் அணுகுவது எனத் தொடர்ந்து செயல்படும் கீழத்திருக்கழிபாலை ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் மீது தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு கூறுகையில், தமிழகம் முழுவதும் பஞ்சாயத்துத் தலைவர்களின் அதிகாரம் குறைக்கப்படுகின்றபோது, 50 சதமான பெண் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளநிலையில், அவர்களைக் கீழ்த்தரமாக நடத்தி அவமானப்படுத்தும் செயல், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் செயலை தடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டம் நடத்தும் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.