தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பதுதொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும்என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் திருச்சி வாணம்பட்டறை வாக்குச் சாவடியில் பதிவு செய்யும் வாக்குகள் வேறு வேட்பாளருக்கு பதிவராக புகார் எழுந்த நிலையில், வாக்குச் சாவடியில் இருந்த மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன.