Skip to main content

மாதவன் தீபா வீட்டுக்குள் வந்தால் உயிருடன் விடமாட்டேன்? ராஜா மிரட்டியதாக போலீசில் புகார் என தகவல்

Published on 19/09/2018 | Edited on 19/09/2018
deepa

தீபா - மாதவன் - ராஜா ஆகியோரிடையே தீபா வீட்டுக்கு வெளியே புதன்கிழமை வாக்குவாதம்

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தீபா வீடு அமைந்துள்ள தியாகராயர் சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீட்டில் இன்று தீபா, தீபாவின் கணவர் மாதவன், தீபா பேரவையில் இருந்த நீக்கப்பட்ட ராஜா ஆகியோரிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதனையடுத்து போலீசார் வந்து மூன்று பேரையும் சமாதானம் செய்தனர். பின்னர் ராஜா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில் மாதவன் மீண்டும் தீபா வீட்டுக்குள் அழைத்து வரப்பட்டால் அவரை உயிருடன் விடமாட்டேன் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து நீக்கப்பட்ட தீபாவின் கார் டிரைவர் ராஜா மிரட்டியதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 
 

தீபா பேரவையில் தலைமை நிலைய தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வரும் சிவகுமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஏற்கனவே இது தொடர்பாக ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த தகவல் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. 
 

Deepa


 

அந்த புகார் மனுவில், தீபா பேரவையில் ராஜா பல்வேறு குளறுபடிகளை செய்து வருவதாகவும், தினகரன் கட்சியினருடன் அவருக்குத் தொடர்பு உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எங்கள் பேரவையில் இருந்து கொண்டே, எங்கள் தலைமையின் குடும்ப வாழ்வுக்கும், அரசியல் வாழ்வுக்கும் இடையூறு செய்வதுடன், அதனை தட்டிக் கேட்ட என்னை ஜுலை மாதம் 26ஆம் தேதி மாலை தலைமை அலுவலகத்திற்குள் வைத்து, இனிமேல் இங்கு வரக்கூடாது எனவும், எங்களது தலைவியைச் சந்திக்க கூடாது எனவும் அதை மீறி செயல்பட்டால் கொலை செய்துவிடுவேன் என்றும் ராஜா மிரட்டல் விடுத்தார். 
 

மாதவன் மீண்டும் தீபா வீட்டுக்குள் அழைத்து வரப்பட்டால் அவரையும் உயிருடன் விடமாட்டேன், உன்னால் முடிந்ததைச் செய்துகொள் என்று சவால் விடுத்தார். தொடர்ந்து மாதவனை அவருடைய சொந்த வீட்டிற்குள் வரவிடாமல் செய்வதன் மூலம் எங்கள் தலைவியே செயல்பட முடியாமல் செய்வதுடன், அவருக்கு எதிராக சதி வேலையை செய்து வருகிறார். எனவே ராஜாவை பற்றியும் அவருக்கு பின்னணியில் செயல்படும் நபர்கள் பற்றியும் விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கோ என்னுடன் இருப்பவர்களுக்கோ எனது குடும்பத்திற்கோ, ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு முழு பொறுப்பு ராஜா மற்றும் அவரது பின்னணியில் செயற்படுபவர்கள் மட்டுமே என்று தெரிவித்துக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதில் நாங்கள் தலையிட முடியாது'- ஜெ.தீபா பேட்டி

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
'We cannot interfere in it' - J. Deepa interview

ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் அதிமுக தொண்டர்களாலும், அதிமுக நிர்வாகிகளாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதேநாளில் சசிகலா 'ஜெயலலிதா இல்லம்' என்ற பெயரில் போயஸ் கார்டனில் புதிய வீடு ஒன்றை கட்டி இன்று குடியேறி உள்ளார். இந்நிலையில் சென்னையில் போயஸ் கார்டெனில் உள்ள வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவர் பேசுகையில், ''ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் இன்று. அவர் எனது அத்தை. அவர் குடும்ப வழி உறவு என்பதால் பிறந்தநாள் விழாவிற்காக எங்களால் முடிந்த அளவிற்கு எளிமையான பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். எங்கள் முறைப்படி செய்து கொண்டிருக்கிறோம். ஒரு பிறந்தநாள் கூட அவருக்கு நாங்கள் வாழ்த்து சொல்லாமல் இருந்ததே இல்லை. எல்லா பிறந்தநாளுக்கும் அத்தைக்கு நான் வாழ்த்து சொல்வேன். வேதா இல்லத்திற்கு எதிரே 'ஜெயலலிதா இல்லம்' என சசிகலா வீடு கட்டியுள்ளது அவருடைய தனிப்பட்ட விஷயம். அதில் நாங்கள் தலையிட முடியாது.

இந்த ரோட்டில் நாங்கள் தான் இருப்போம் வேறு யாரும் இருக்கக்கூடாது என்று சொல்ல முடியாது. அது அவர்களுடைய இல்லம். அங்கு அவர்கள் வீடு கட்டியுள்ளார்கள். அதில் குடியேறி உள்ளார்கள். என்னுடைய பர்சனலாக என்னுடைய நினைவெல்லாம் இங்கேதான். இந்த இடத்தில் தான் அவருக்கு நான் வாழ்த்து சொல்வேன்'' என்றார்.

Next Story

''அவர் தீபா கட்சிக்கு போயிட்டு வந்தவர்... பெரிய ஆள் இல்ல'' - எடப்பாடி பழனிசாமி

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
"He used to go to Deepa's party; There is no great man'' - Edappadi Palaniswami interview

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

"He used to go to Deepa's party; There is no great man'' - Edappadi Palaniswami interview

தொடர்ந்து ஏ.வி. ராஜு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், ''என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

"He used to go to Deepa's party; There is no great man'' - Edappadi Palaniswami interview

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், முன்னாள் அதிமுக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''அவர் பேசியதற்கு தான் எல்லோரும் எதிர்ப்பு கொடுத்து வருகிறார்கள். அவர் ஒரு பெரிய ஆள் இல்ல. அவர் தீபா கட்சிக்கு போயிட்டு வந்தவர். ஏதோ இரக்கப்பட்டு சேர்த்துக் கொண்டோம். உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. அதனால் விட்டு வைத்திருந்தோம். இப்பொழுது கட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் கட்சி ஒழுங்கு  நடவடிக்கை எடுத்திருக்கிறது'' என்றார்.