ADVERTISEMENT
அதே வேளையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் அதிகாரிகள் தமிழகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தன்னுடைய அடையாள அட்டையை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார்.
ADVERTISEMENT
அவர் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது, ‘இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்கத் தபால் மூலம் அனுப்ப தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் தனிச் செயலாளர் தபால் நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவருடைய அட்டையை காணாமல் போய்விட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Show comments