Skip to main content

துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களை ஊக்கப்படுத்திய எஸ்.பி.!

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

competition tamilnadu police in kanchipuram district


தமிழக காவல்துறை சார்பில் ஆண்டுதோறும் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள காவல்துறை துப்பாக்கிச் சுடும் தளத்தில் நடைபெற்றது. 

 

இதில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி பெற்ற காவல்துறையினர், கலந்துகொண்டு தங்களது துல்லிய திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டியில் ஈரோடு, கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலம் சார்பில் கலந்துகொண்ட வீரர்கள் மாநில அளவில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி 'ரைஃபிள்' மற்றும் 'கார்பைன்' துப்பாக்கிச் சுடும் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். 
 

competition tamilnadu police in kanchipuram district


மேற்கு மண்டலம் சார்பில் கலந்துகொண்ட உதவி ஆய்வாளர் மணி, காவலர் பிரகாஷ் ஆகியோர் முதல் பரிசான தங்கப் பதக்கங்களையும், ஆய்வாளர் தீபா, காவலர் குமுதா ஆகியோர் இரண்டாம் பரிசான வெள்ளிப் பதக்கங்களையும், காவலர்கள் சங்கரன், சிவராஜ் மற்றும் ரிசாத் ஆகியோர் மூன்றாம் பரிசாக வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர். 

 

இப்போட்டிகளில் மேற்கு மண்டலம் சார்பில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்ற வீரர்கள் மற்றும் அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளித்த காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோரை மேற்கு மண்டல காவல்துறை தலைவர், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் பாராட்டினர்.
 

competition tamilnadu police in kanchipuram district


ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி. தங்கதுரை, துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களை நேரில் வரவழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, "வரும் காலத்தில் மேலும் பல சாதனைகள் புரிந்து தமிழக காவல்துறைக்கும், ஈரோடு மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க தொடர்ந்து உற்சாகத்துடன் செயலாற்றுங்கள்" எனக் கூறி வீரர்களை ஊக்கப்படுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.