mafoi

Advertisment

பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றச்செயல்களல் குறைவு தான் என தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகம் பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக திகழ்ந்து வருகிறது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

அமைதியற்ற மாநிலம் தமிழகம் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதில் உண்மையில்லை. இந்தியாவிலே குற்ற எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும் பெரும் மாநிலம் தமிழகம் தான். சின்ன சின்ன மாநிலங்களை எடுக்காமல், பெரும் மாநிலங்களை ஒப்பிடுகையில், பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களை விட தமிழகத்தில் குற்ற எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.

Advertisment

தனிக்கட்சி தொடங்கும் தினகரன் திமுக தலைவர்கள் யாருடைய பெயரையாவது வைக்கலாம். திமுகவுடன் சேரந்து ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.