Skip to main content

அமெரிக்க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்!(படங்கள்)

Published on 29/07/2021 | Edited on 29/07/2021

 

இன்று (29.07.2021) சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமெரிக்க ஏகாதிபத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது, “அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபா நாட்டின் மீது 69 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திவருகிற பொருளாதார தடையினை வாபஸ் பெற வேண்டும். மேலும், அங்குள்ள மக்களைச் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இன்றைய தினம் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 

அமெரிக்காவின் மூக்கிற்கு கீழே 60 கிலோமீட்டர் தொலைவிலே இருக்கக்கூடிய கியூபா நாட்டை, அந்நாடு சுதந்திர நாடாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டிருந்த காலத்திலிருந்து ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அந்த ஆட்சியைக் கவிழ்த்து சதி செய்வதற்கு ஒரு பொருளாதார தடையை அமெரிக்க ஏகாதிபத்தியம் விடுத்திருக்கிறது. கியூபாவோடு எந்த நாடும் பொருளாதார உறவுகொள்ளக்கூடாது. மேலும், வர்த்தக உறவு வைக்கக்கூடாது என்ற அடக்குமுறையைப் பிரயோகித்து அந்த நாட்டு மக்களை வதைத்துக்கொண்டிருக்கிறது. இந்தக் கரோனா காலத்தில் அந்த நாட்டு மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் தடுப்பூசிகளை அனுப்பக் கூடாது என சித்திரவதை செய்துகொண்டிருக்கிறது. சுதந்திரமாக இருக்க வேண்டிய ஒரு நாட்டை அடக்குமுறையின் மூலம் நிர்மூலமாக்குகிற அமெரிக்காவை எதிர்த்து பல நாடுகளும் கண்டன குரலை எழுப்பி வருகிறது.

 

ஐக்கிய நாடுகள் சபையில் 184 நாடுகள் இந்தத் தடையை வாபஸ் வாங்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் கூட இன்றைக்கு அமெரிக்கா அடிபணியாமல் அதிகாரத்தைப் பயன்படுத்திவருகிறது. எனவே அராஜகத்தைக் கண்டித்தும், பொருளாதார முறையில் மக்களைக் கண்டிக்கும் இந்தப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது” என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.