இன்று (11.09.2021) சென்னை பாரிமுனை குறளகம் முன்பு ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள், தலைவர்கள் மீது கொலைவெறி தாக்குதல், தலைவர்களின் சிலைகள், கட்சி அலுவலகங்கள் சூறையாடல் மற்றும் வெறியாட்டத்தை கண்டித்து கண்டன குரல் எழுப்பினர். இந்த நிகழ்வில் ஜி.ராமகிருஷ்ணன் (அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்) பங்கேற்றுக் கொண்டார்.

Advertisment