கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதி முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமூகநீதி அரசாணை நூற்றாண்டு நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளார்.
முதல்வர் அறிவித்துள்ள இந்தக் குழுவில் கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் ஆகியோர் இடம்பெறுவார்கள். சமூகநீதி முறையாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்குழு பரிந்துரைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அமைப்பு இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.