தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஒமிக்ரான் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கையாக முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 7வது மாடியில் ஓமிக்ரான் சிகிச்சைக்காக முன்னேற்பாடாக 120 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இதனை இன்று சுகாதார செயலாளர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் ஆகியோர் ஆய்வு செய்தனர்.