Skip to main content

கர்நாடக அணைகளின் நீர் திறப்பு, அடைப்பது ஆணையம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் : பி.ஆர்.பாண்டியன்

Published on 01/07/2018 | Edited on 01/07/2018
priya


 காவிரி மேலாண்மை ஆணையம்  முதல் கூட்டம் தொடர்பாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளதாவது:

‘’காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு முதல் கூட்டம் நாளை (02.07.2018) நடைபெற உள்ளதை அறிந்து ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 மிகுந்த மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் கூட்ட நடவடிக்கைகளை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கிறோம். காவிரி போராட்டத்திற்க்கான ஒரு மைல்கல் என்பதை உணர்கிறோம். ஆணையம் அரசியல் தலையீடின்றி தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக பாரபட்சமின்றி காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பின்பற்றி உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு உத்திரவுகளின் அடிப்படையில் கூட்ட நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.


உடன் கர்நாடகா உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களின் காவிரி அணைகளின் நதி நீர் பங்கீடு, கண்கானிப்பு மற்றும் நிர்வாகம் உடன் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதோடு, அவ்வப்போது இணைய தளங்கள் மூலம் நீர் இருப்பு, வாய்ப்பு குறித்த விபரங்களை அனைவரும் தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்கிட வேண்டும்.

 இந்தியா முழுவதும் தென் மேற்கு பருவ மழையை கொண்டு கட்டப்பட்டுள்ள அனைத்து அனைகளும் ஜனவரி இறுதியில் மூடப்பட்டு மே மாதம் இறுதி வரை நீர் சேமிப்பு காலமாக பின்பற்றப்படுகிறது. அதனை காவிரிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களும் கடைபிடிப்பதை உறுதியோடு பின்பற்றிட வேண்டும்.

 

மே மாதமே இவ்வாண்டு தென்மேற்கு பருவ மழை துவங்கியதால் முன்தேதியிட்டு தண்ணீர் பகிர்ந்தளிப்பதை இறுதிப்படுத்த வேண்டும்.

ஆனையகக் கூட்டம் எடுக்கும் முடிவுகளை பின்பற்றி காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு தனது பெங்களூர் தலைமை அலுவலக செயல்பாடுகளை நாளையே துவங்கி தண்ணீர் பங்கீட்டு நடவடிக்கைகளை செயல்படுத்திட வேண்டும்.

பாசன சட்ட விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவதை கண்டிப்புடன் பின்பற்றுவதை கண்கானித்திட வேண்டும்.  ஒவ்வொரு மாநிலமும் பாசனத்திற்க்கென தனித்துறை உருவாக்குவதை கட்டாயமாக்கிட வேண்டும்

.   குறுவை சாகுபடி செய்ய இவ்வாண்டு இனி வாய்ப்பில்லாத நிலையில் ஒரு போக சம்பா சாகுபடியை மேற்க்கொள்ள மாதாந்திர அடிப்படையில் நமக்கு தர வேண்டிய தண்ணீரை பெற்று வழங்குவதற்கு ஆணையம் முன் வரவேண்டும்.’’

சார்ந்த செய்திகள்

Next Story

'காவிரி நீர் எங்கே...? மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்ட பி.ஆர்.பாண்டியன் குண்டுக்கட்டாக கைது

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

'Where is Cauvery water...? BR Pandian who shouted slogans condemning the central and state government was arrested

 

காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, அதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தீர்ப்பு நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என தஞ்சாவூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இந்நிலையில் சென்னை மெரினா சாலையில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டார். 'கர்நாடக அரசிடம் இருந்து நீரை பெற்றுத்தராத மத்திய அரசையும், வேடிக்கை பார்க்கும் மாநில அரசையும் கண்டிக்கிறேன்' என கோஷமிட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அங்கிருந்து செல்ல மறுத்ததால் போலீசாருக்கும் பி.ஆர்.பாண்டியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியனும், அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிர்வாகியும் தொடர்ந்து குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

 

 

 

Next Story

முல்லைப் பெரியாறு அணை கட்டுமானத்தில் ஈடுபட்ட மறைந்த டி.ஐ.ஜி.யின் குடும்பம் - பி.ஆர்.பாண்டியன்

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

B.R. Pandian condoles the demise of DIG Vijayakumar

 

“தனது மூதாதையர் முல்லைப் பெரியாறு அணை கட்டுவதில் ஈடுபட்டதை டிஐஜி விஜயகுமார் அவ்வப்போது என்னிடத்தில் நினைவு கூறுவார்” என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

 

கோவை டிஐஜி விஜயகுமார் இறப்பு குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காவல்துறையில் கோவை சரக டிஐஜியாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மிகச் சிறப்பாகவும் நேர்மையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் துணிவோடும் செயல்படும் பண்புமிக்கவர். விளம்பரம் இல்லாமல் தன்னடக்கத்துடன் அனைவரிடத்திலும் சிரித்த முகத்துடன் பணிவுடன் பழகும் உயர்ந்த மனம் கொண்டவர்.

 

தேனி மாவட்டத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தனது மூதாதையர் முல்லைப் பெரியாறு அணை கட்டுவதில் ஈடுபட்டதை அவ்வப்போது என்னிடத்தில் நினைவு கூறுவார். தேனி மாவட்ட விவசாயிகள் பிரச்சினைகளுக்காக நான் தேனி பகுதி சென்று திரும்பும்போதெல்லாம் பிரச்சனைகள் குறித்து என்னோடு தொலைபேசியில் விவாதிப்பார். தான் பிறந்த மண்ணின் மீதும் முல்லைப் பெரியாறு அணை மீதும் அளவற்ற மோகம் கொண்டவர். 

 

இரண்டு முறை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு மிகச்சிறந்த காவல்துறை அதிகாரி என்கிற புகழை அனைவரிடத்திலும் பெற்றவர். இவரது மறைவு காவல் துறையில்  பேரிழப்பாகும். அதுமட்டுமின்றி காவல்துறையில் காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் அடிமட்ட காவலர்கள் துவங்கி உயர்மட்ட அதிகாரிகள் வரையிலும் தொடர்வதை தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு இவரது மரணம் வழிகாட்டுதலாக அமையும் என நான் எதிர்பார்க்கிறேன். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.