தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் முன்னெடுப்பாக சாதிவாரி புள்ளிவிவரங்களை சேகரிக்க தமிழக முதல்வர் ஆணையம் அமைத்துள்ளார். புள்ளி விவரங்களை திரட்டும் பொறுப்பு முன்னாள் நீதிபதி குலசேகரனிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆணையம் விரைவில் சாதி வாரி புள்ளி விவரங்களை சேகரித்து தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.