காவலர் வீரவணக்க நாள்: அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்! (படங்கள்)

ஆண்டு தோறும் அக்டோபர் 21 ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காவலர் வீரவணக்க நாள் (Commemoration Parade) அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, இன்று காலை (21.10.2021) தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்திலுள்ள காவல் நினைவுச்சின்னத்தில் காவல் துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப மற்றும் காவல் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

commeration parade DGPsylendrababu tamilnadupolice
இதையும் படியுங்கள்
Subscribe