Skip to main content

''விபத்தில் சிக்கியிருக்கேன் வந்து காப்பாத்துங்க...'' - கஞ்சா வாங்க இளம்பெண் கொடுத்த ட்விஸ்ட்

Published on 17/03/2022 | Edited on 17/03/2022

 

'' Come and save me in an accident .. '' The twist given by the girl to buy cannabis!

 

கஞ்சா வாங்குவதற்குப் பணம் இல்லாததால் தங்கையை இளைஞரிடம் பேச வைத்து, ஏமாற்றி வரவழைத்து தாக்கி நகை பறித்த சம்பவம் நாகர்கோவிலில் நிகழ்ந்துள்ளது.

 

நாகர்கோவிலில் விஷ்ணு என்ற இளைஞரை இரவில் தொடர்புகொண்ட நண்பனின் தங்கை, தான் நல்லூர் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், தன்னைக் காப்பாற்றும்படியும் கூறியுள்ளார். விபத்தில் சிக்கிக் கொண்டதாக நண்பனின் தங்கை கூறுவதைக் கேட்டு அதிர்ந்த விஷ்ணு அவர் சொன்ன இடத்திற்குச் சென்றபோது அவரை 9 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்துள்ளது. விஷ்ணுவிடம் இருந்த நகை, செல்போன், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை அந்தக் கும்பல் பறித்துக் கொண்டு சென்றது.

 

'' Come and save me in an accident .. '' The twist given by the girl to buy cannabis!

 

இதுதொடர்பாக சுசீந்திரம் காவல்நிலையத்தில் விஷ்ணு தனது உறவினர்களுடன் சென்று புகாரளித்த நிலையில் விஷ்ணுவுடன் போனில் பேசிய நண்பனின் தங்கையைப் பிடித்து விசாரித்ததில், கஞ்சா வாங்க பணம் இல்லாததால் சகோதரனின் பேச்சைக் கேட்டு இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக அந்தப் பெண் உண்மையை ஒப்புக்கொண்டதோடு மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட அந்தக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.