Skip to main content

இனி டாஸ்மாக் கடைகளில் மது வாங்க கலர் டோக்கன் வாங்கணும்???

Published on 14/05/2020 | Edited on 14/05/2020

 

  Color token is required to buy wine at Tasmac stores

 

டாஸ்மாக் மீண்டும் திறப்பது குறித்து நீதிமன்றத்தில் மேல் முறையிட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில், டாஸ்மாக் விற்பனையை எப்படி இன்னும் எளிமைபடுத்தலாம் என்று புதிய யுத்திகளுடன் தயார் நிலையில் இருக்கிறார்கள் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்.


திருச்சியில் கடந்த 7ம் தேதி 163 கடைகள் திறப்பட்டது. முதல் இரண்டு நாட்களும் கடுமையான கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி கேள்விக்குறியாதனதால், டாஸ்மாக் கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் திறக்க அளித்த மேல்முறையீட்டு மனு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது, விசாரணை நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் திருச்சியில் தீர்ப்பு எப்படியும் டாஸ்மாக் திறக்க சொல்லி வரும் என்கிற நம்பிக்கையில் முன்னெச்சரியாக டாஸ்மாக் ஊழியர்களை அழைத்து குடிமகன்களிடம் வழங்கும் டோக்கன்களை வழங்கியுள்ளனர். 

 

 


வாரத்தின் 7 நாட்களும் ஒவ்வொரு கலரில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாகவும். இதை வைத்துதான் இனி குடிமகன் மது வாங்க முடியும் என்றும், படிக்காதவர்களும்கூட கலர் டோக்கனை வைத்தே வாங்க முடியும் என்கிறார்கள்.

தீர்ப்பு வெளியானவுடன் இந்த நடைமுறையை பின்பற்ற வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் டாஸ்மாக் வட்டார ஊழியர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.