Skip to main content

காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற சேலைகளில் வண்ண வேலிகள்!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தூர், அக்கரைப்பட்டி, மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி, சித்தையன்கோட்டை மற்றும் ஆத்தூர் காமராசர் நீர்த்தேக்க பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் மக்காச்சோள பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

 

Color fences in sarees to protect crops from wild boars!


இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் தோட்டத்தின் உள்ளே புகுந்து பயிர்களை அழிப்பதோடு காவல்காத்து வரும் காவலாளிகளையும் விரட்டி வருகிறது. இதுதவிர பன்றிகள் கூட்டமாக வரும்போது அவ்வழியே செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக மல்லையாபுரம் பகுதியில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பன்றிகளால் பலமுறை விபத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆத்தூர் ஊராட்சி செயலாளர் மணவாளன் மல்லையாபுரத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பன்றிகள் கூட்டம் திடீரென வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால் பலத்த காயத்திற்கு ஆளானார். இதுபோல தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருவதால் விவசாயிகள் காட்டுப்பன்றி மற்றும் ஆடுகள், மாடுகளிலிருந்து மக்காச்சோள பயிர்களை காப்பாற்ற சேலைகளை கொண்டு வண்ணவேலிகள் அமைத்து வருகின்றனர்.

 

Color fences in sarees to protect crops from wild boars!


இந்த வேலிகள் பார்ப்பதற்கு பல வண்ணங்களில் இருப்பதால் காட்டு விலங்குகள் இதை பார்த்தவுடன் மிரண்டு தோட்டத்திற்குள் நுழையாமல் சென்றுவிடுகின்றன. தற்போது விவசாயிகள் தோட்டங்கள் முழுவதும் வேலிகள் அமைக்க நூற்றுக்கணக்கான சேலைகளை வாங்கி குவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆத்தூரை சேர்ந்த முருகன் கூறுகையில், மக்காச்சோள பயிரில் கதிர் விட்டவுடன் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகளிடமிருந்து காப்பாற்ற நாங்கள் புதிய மற்றும் பழைய சேலைகளை கொண்டு தோட்டம் முழுவதும் வேலிகள் அமைத்து வருகிறோம் என்றார்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.