College teachers should ban the caste associations

Advertisment

கல்லூரி ஆசிரியர்களிடையே அதிகரித்து வரும் சாதி மோதல்களையும்சாதி ரீதியான சங்கங்களையும் தடை செய்யக்கோரி கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர்கடந்த புதன்கிழமை (மார்ச் 01, 2023) வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் சங்க செயலாளர் வெங்கட்ராமலிங்கம் தலைமையில், சேலம் அரசு கலைக்கல்லூரி முன்பு இந்தப் போராட்டம்நடந்தது. போராட்டத்தின்போது, அரசுக்கல்லூரி வளாகங்களில் ஆசிரியர்களுக்கு இடையே உள்ள சாதி ரீதியான மோதல்களைக் களைய வேண்டும்;கல்லூரி ஆசிரியர்களிடையே உருவாகியுள்ள சாதி சங்கங்களை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி முன்பும் இக்கோரிக்கைகளைவலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டம் நடந்தது.