தமிழகம் முழுவதும் பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடி மாத திருவிழாக்கள் நடப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதம் 18 ஆம் நாள் ஆடிப்பெருக்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த விழாவின்போது பெண்கள் நீர்நிலைகளுக்குச் சென்று வழிபாடு நடத்துவர்.
தமிழரின் சிறுதெய்வ வழிபாட்டை நினைவுகூறும், சிறப்புமிக்க ஆடிப்பெருக்கு விழா சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவின்போது மாணவிகள் பறையாட்டம், ஒயிலாட்டாம் போன்ற பாரம்பரிய நடனங்கள் ஆடியும், கயிறு இலுக்கும் போட்டி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடியும் மகிந்தனர். மேலும், மாணவிகள் பலர் அம்மன் வேடமணிந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.