Skip to main content

கூவம் ஆற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!

Published on 21/07/2018 | Edited on 21/07/2018

 

கோட்டூர்புரத்தை சேர்ந்த  கல்லூரி மாணவி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

sucide

 

 

 

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ரம்யா. இவர் சென்னையிலுள்ள மீனாமுத்தையா கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி ரம்யா திரும்ப வராததால் அவரது குடும்பத்தினர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நேற்று இரவு புகாரளித்தனர்.

 

sucide

 

 

 

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசாருக்கு ஒருபக்கம் கூவம் ஆற்றில் ஒரு பெண் குதித்தாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் கூவம் ஆற்றில் இறங்கி சோதனையிட்டனர். அப்போது மாணவி ரம்யாவின் உடலை போலீசார் கைப்பற்றினர். பின்னர் குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டு இறந்தது ரம்யாதான் என உறுதிசெய்த போலீசார் சடலத்தை உடல்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர்.

 

மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

சார்ந்த செய்திகள்