Skip to main content

புத்தகத்தை பார்த்து தேர்வெழுத விடுங்கள்... கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020
PUDUCHERRY

 

 

மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்க கூடிய உறுப்பு கல்லூரிகள் அனைத்திற்கும் கடந்த 21ஆம் தேதி இறுதிப் பருவத்தேர்வு தொடங்கியிருக்கும் நிலையில் புத்தகங்களை பார்த்து தேர்வு எழுத விடாததால் கண்டன கோஷங்களை எழுப்பி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் மூலம் எழுதலாம் என அறிவிப்பை மத்திய பல்கலைகழகம் அறிவித்திருந்தது. அதேபோல் இந்த தேர்வுகளை புத்தகத்தைப் பார்த்து எழுதலாம் என்று அனுமதியையும் மத்திய பல்கலைக்கழகம் வழங்கி இருந்தது. இதனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அதேபோல் சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த 21ஆம் தேதி முதல் தேர்வுக்கு செல்லும் பொழுது புத்தகங்களை எடுத்து சென்று தேர்வு எழுதி வருகின்றனர்.

 

இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் தேர்வு எழுத சென்ற நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியின் தேர்வு மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுத புத்தகத்தை எடுத்து சென்ற பொழுது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதக்கூடாது என  கண்டிக்கப்பட்ட  நிலையில், இதனை தொடர்ந்து மாணவர்கள் தேர்வு மையத்தின் எதிர்புறத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் இல்லையெனில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.