Skip to main content

பணத்திற்காக கடத்தப்பட்ட கல்லூரி மாணவன் கழுத்து அறுத்து கொலை

Published on 05/01/2019 | Edited on 05/01/2019

திருவிடைமருதூர் அருகே பொறியியல் கல்லூரி மாணவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

mm

 

திருவிடைமருதூர் அருகே அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மகன் முந்தாசர் (20). மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு படித்து வருகிறார்.

 

இவரது தந்தை துபாய் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். தாயார் மும்தாஜ் பேகத்துடன் உள்ள முந்தாசர், இரவு 7 மணி அளவில் திருமங்கலக்குடியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு டி.வி.எஸ் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். 

 

அவரது அக்கா வீட்டிலிருந்து திருவிடைமருதூரில் உள்ள அவரது நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு செல்வதாக ஃபோன் மூலம் தாய் மும்தாஜ் பேகத்திடம் கூறியிருக்கிறார்.

 

இந்நிலையில் இரவு 8.15 மணி அளவில் முந்தாசர் ஃபோனிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர்  முந்தாசரை நாங்கள் கடத்தியுள்ளோம். கோயம்புத்தூர் அழைத்துச்செல்கிறோம், ரூ. 5 லட்சம் கொடுத்தால்தான் உங்கள் மகனை உயிரோடு விடுவிப்போம் என மிரட்டலோடு கூறியுள்ளனர். இதனால் பதட்டம் அடைந்த தாயார் மும்தாஜ் பேகமும் அவரது உறவினர்களும் திருவிடைமருதூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு  குவிந்தனர். 

 

இதுகுறித்து அவனியாபுரம் முன்னாள் ஊராட்சி தலைவரும், அவரின் தாய்மாமாவுமான நசீர்முகமது கொடுத்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார்.

 

முதற்கட்ட விசாரணையில் இரவு  8.15  மணி அளவில் மும்தாசர்  ஃபோனிலிருந்து வந்த அழைப்பு, திருபுவனம் பகுதியிலிருந்து பேசப்பட்டது என்பதை செல்ஃபோன் சிக்னல் மூலம் கண்டறிந்தனர். பிறகு அந்த செல்ஃபோனை தொடர்பு கொள்ள முயற்சிக்க ஃபோன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக பதில் வந்தது. 

 

இதனால் மேலும் உறவினர்களிடையே பதட்டம் ஏற்பட்டது.  பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தப்பட்டது உண்மையா, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார், அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  மேலும் மாயமான பொறியியல் கல்லூரி மாணவர் முந்தாசரை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் பணம் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவன் முந்தாசர் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் வீரசோழன் ஆற்றுக்கு அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலைசெய்யப்பட்டு  இறந்துகிடந்தார். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் தகராறு; வாலிபரை வெட்டிக் கொன்ற நண்பர்கள்

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

A teenager passed away by his friends in thiruvallur

 

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (25). இவர் கடந்த 16ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு தனது நண்பர்களுடன் வெளியே செனறுள்ளார். வெளியே சென்ற அஜித் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில் சந்தேகமடைந்த அஜித்தின் பெற்றோர் பல இடங்களில் தேடி வந்துள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். 

 

இதற்கிடையே, ராமாரெட்டி பாளையம் கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் மீஞ்சூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், அந்த கிணற்றில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் பின்னர், பேரூராட்சி உதவியுடன் அந்த சடலத்தை மீட்டனர். அப்போது, அந்த சடலத்தின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்துள்ளது.

 

அதனை தொடர்ந்து, அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், கிணற்றில் சடலமாக கிடந்தவர் காணாமல் போன அஜித் என்ற அதிர்ச்சி தகவல் காவல்துறையினருக்கு தெரிய வந்தது. மேலும், அவரது நண்பர்களான நாகராஜ் (21), வசந்தகுமார், மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

 

அந்த விசாரணையில், சம்பவ தினத்தன்று அஜித் தனது நண்பர்களான நாகராஜ், மோகன் (22), சாய் (22), கணேஷ் (25), வசந்தகுமார் மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதில் போதை தலைக்கேறிய அஜித் தனது நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள், அஜித்தை கத்தியை வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர், அஜித்துடைய கை, கால்களை துணியால் கட்டி ஏரிக்கரையில் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நாகராஜ், வசந்தகுமார் மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் 3 நண்பர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

Next Story

தண்டவாளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்... தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

The young man who passed away on the railway track

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் மாரியப்பன் - அமுதா தம்பதியர். மெக்கானிக்கல் என்ஜீனியரான இவர்களது மகன் பாண்டியராஜன், நேற்று (17.11.2021) காலையில் பெற்றோரிடம் வயலுக்குச் சென்றுவருகிறேன் எனக் கூறிச் சென்றார். ஆனால், மதியம் வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மகனைத் தேடிச் சென்றபோது பாண்டியராஜன் வயல் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருச்சி ரயில்வே காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பாண்டியராஜனின் உறவினர்கள் அவரது சாவில் மர்மம் உள்ளது என தெரிவித்தனர். ‘கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டியராஜனின் வயலில் பணியில் இருந்தபோது அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள்தான் பாண்டியராஜனை கொன்று உடலை தண்டவாளத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். எனவே இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும்’ என புகார் செய்துள்ளனர். இதுகுறித்து துவாக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.