Skip to main content

கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; காதலன் கண் முன்னே நடந்த கொடூரம்

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

college student incident kanchipuram

 

காஞ்சிபுரத்தில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

 

காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்த 18 வயதான மாணவி, அதே கல்லூரியில் பிபிஏ படிக்கும் மாணவனை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 12ம் தேதி வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் , காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு அருகே உள்ள குண்டு குளம் வயல் பகுதியில் இருவரும் தனிமையில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர், அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் நான்கு பேர் அந்தக் காதல் ஜோடியை கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளனர்.

 

பின்னர் காதலனை அடித்து சட்டையைக் கழற்றி கை கால்களை கட்டிவிட்டு, காதலன் கண் எதிரே அந்த நான்கு பேரும் மாறி மாறி அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அவர்கள் இந்த சம்பவத்தையும் செல்போனில் படம் எடுத்துள்ளனர். இதையடுத்து இருவரிடமும் இருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். வீட்டுக்குச் சென்ற காதல் ஜோடி நடந்ததை அந்த மாணவியின் வீட்டுக்கு தெரிவித்துள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் மற்றும் விஷ்ணு காஞ்சிபுரம் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் காதலர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர்களில் ஒருவன் பெயர் விமல் என்பது மட்டும் தெரிய வந்தது. அதை வைத்து விப்பேடு பகுதியில் விமல் என்பவனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸ் பாணியில் விசாரணை நடத்தியதில், செவிலிமேடு பகுதியைச் சேர்ந்த ஊமை மணிகண்டன், விப்பேடு விமல் குமார், சிவக்குமார், மரம் என்கிற தென்னரசு ஆகிய நான்கு பேரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். இவர்களை கைது செய்த போலீசார் மேலும் இதுபோன்று வேறு ஏதேனும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்று  விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் காஞ்சிபுரத்தையே பரபரப்பாக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.