Skip to main content

போதைக்கு அடிமையான கல்லூரி மாணவி... கம்பி எண்ணவைத்த கஞ்சா போதை கலாச்சாரம்!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

சென்னையில் கடந்த திங்கட்கிழமை சாலையோரம் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரிடம் காதல்ஜோடி ஒன்று செல்போனை வழிப்பறி செய்த சம்பவத்தில் கஞ்சா போதைக்கு ஆளான முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி காதலனுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் இறங்கியது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

college student addicted to drug...

 

சென்னை தேனாம்பேட்டையில் அழகு நிலையம் வைத்திருப்பவர் பிரசன்னா லிப்சா. இவர் தனது தோழியுடன் தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் கடந்த திங்கட்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் ஒரு பெண்ணுடன் வந்த இளைஞன், லிப்சா கையில் வைத்திருந்த செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் சடார் என பறித்துக்கொள்ள, வீர் என அந்த பைக்கில் பறந்தது அந்த காதல் ஜோடி. இதனால் அதிர்ந்து போன லிப்சா அருகிலுள்ள தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தார். அப்போது கிடைத்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேசன், தலைமை காவலர் பொன்னுவேல் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்த தொடங்கியது.

 

college student addicted to drug...

 

அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் எங்கிருந்து பயணித்து வந்தனர் என ஆராய்ந்தபோது அசோக் நகர் வழியாக கிண்டி வந்ததும், அங்கு கத்திபாராவில் இதேபோல் ஒரு பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டு அதேபோல் இங்கும் வழிப்பறி திருட்டை அரங்கியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சியில் கிடைத்த அந்த இருசக்கர வாகன எண்ணை கொண்டு ஆராய்ந்ததில் அந்த வாகனம் வேளச்சேரியை சேர்ந்த மோகன் என்பவரது வாகனம் என்பதும், அதையும் இந்த காதல் ஜோடி ஞாயிற்றுகிழமை இரவு திருடி, திருட்டு வாகனத்தில் வலம் வந்ததும் தெரியவந்தது.

 

college student addicted to drug...


பின்னர் போலீசார் பட்டியலில் உள்ள பழைய குற்றிவாளிகளிடம் மேற்கொண்ட விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட அந்த நபர் ராஜா என்பதும், அந்த பெண் சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு விஸ்காம் பயின்று வரும் மாணவி சுவாதி என்றும் தெரியவந்தது. மேலும் அந்த பெண் வேறொரு செயின் பறிப்பில் ஈடுபடும் நபருடன் சுற்றி திரிந்தவர் என்றும் தெரியவந்தது. அந்த பெண்ணின் விடுதியை கண்டுபிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் அந்த விடுதியை ஒரு வாரத்திற்கு முன்புதான் காலிசெய்தார் என்ற தகவல் கிடைக்க அந்த பகுதியிலேயே போலீசார் ஒருவாரம் தீவிர தேடலில் ஈடுப்பட்டனர்.

 

college student addicted to drug...

 

அப்போது அதேபகுதியில் திருடப்பட்ட இருசக்கர வாகனம் ஒரு வீட்டின் முன்பு நின்றிருக்க, அந்த வீட்டில் சென்று போலீசார் பார்த்தபோது வழிப்பறியில் ஈடுபட்ட ராஜாவும், கல்லூரி மாணவி சுவாதியும் கஞ்சா போதையில் தள்ளாடிய நிலையில் கிடந்தனர். உடனடியாக அவர்கள் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு போதை தெளியும் வரை காத்திருந்தது காவல்துறை. போதை தெளிந்த பிறகுதான் தாங்கள் கைது செய்யப்பட்டோம் என்று அவர்களுக்கே தெரியவந்தது.

 

college student addicted to drug...


சென்னை சூளைமேட்டை சேர்ந்த ராஜா சுவாதிக்கு இன்ஸ்டாவில் பழக்கமாகியுள்ளான். ராஜா டேட்டூ வரையும் வேலை செய்து வந்ததாகவும் இருவரும் நேரில் பழகி காதலர்களாக சுற்றி திரிந்த நிலையில் போதைக்கு அடிமையான இருவரும் சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம் செல்போனை பறித்து பர்மா பஜாரில் விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு கஞ்சா போதை அனுபவித்து வந்ததும் தெரியவந்தது.

கரூரில் இருந்து சென்னை வந்து முதலாம் ஆண்டு பயின்று வந்த கல்லூரி மாணவி கஞ்சா போதைக்கு அடிமையாகி இப்படி வாழ்விழந்து, கல்வியை இழந்து சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளியிருக்கிறது இந்த போதை கலாச்சாரம்.              

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.