முதலமைச்சரின் கரோனாநிவாரண நிதிக்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள் மற்றும்அரசியல்வாதிகள் உள்பட பலதரப்பட்ட மக்களும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலெக்டரிடம் கரோனாவுக்கான நிவாரண நிதியை செக்காகவும் பணமாகவும் வழங்கி வருகிறார்கள்.

Advertisment

 College secretary provided  Corona Relief fund to Dindigul Collector

அதுபோல் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்காக அணில் சேமியா, நாகா சேமியா உள்பட பல்வேறு நிறுவனங்களும் முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்காக பல லட்சங்களை நிதியாக கொடுத்துள்ளது. அதுபோல் திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரி செயலாளரும், வேதா கிரின் பவர் பிரைவேட் லிமிட் நிர்வாக இயக்குனருமானலயன் டாக்டர். ரெத்தினம் முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிபத்து லட்சத்துக்கான காசோலையை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் வழங்கினார்.