Skip to main content

ஆள்மாறாட்டத்தை மூடிமறைக்கபார்த்த கல்லூரி முதல்வர்! வெளிவராத தகவல்கள்!!

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நீட் தேர்வு மூலம் சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா மும்பையில் நீட்தேர்வு எழுதியதின் மூலம் தேர்ச்சி பெற்றார் என்ற அடிப்படையில் தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து முதலாமாண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார்.

 

llll


ஆனால் மும்பையில் நீட்தேர்வு எழுதியது உதித்சூரியா இல்லை என்றும், அதற்கு பதிலாக ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி இருக்கிறார் என்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் ஆள்மாறாட்டம் மூலம் உதித்சூரியா கல்லூரியில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. அதன் பேரில் கல்லூரி முதல்வரின் புகாரின் பேரில் உதித்சூர்யாவையும் ஆள்மாறாட்டம் செய்த மற்றொரு மீதும் வழக்குப்பதிவு  செய்துள்ளனர். அதோடு அந்த இருவரையும் கைது செய்வதற்காக எஸ்பி பாஸ்கரன் இரண்டு  தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறார். அதைக்கண்டு சென்னையைச் சேர்ந்த மாணவன் உதித்சூரியாவும் ஆள்மாறாட்டம் செய்த நபரும் தலைமறைவாகி விட்டனர்.
          

இது சம்பந்தமாக நாம் விசாரணையில் இறங்கிய போது... 

College Principal Seeks to Unpublished in neet exam abuse information !!


ஆள்மாறாட்டம் மூலம் தேனி மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவன் உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சென்னையில் அரசு மருத்துவராக இருந்து வருகிறார் .அதுபோல் தேனி மருத்துவக் கல்லூரியில் முதல்வராக இருக்க கூடிய ராஜேந்திரன் ஏற்கனவே சென்னையில் டாக்டராக பணி புரிந்தபோது இருவரும் நண்பர்களாக பழகி வந்திருக்கிறார்கள். இந்தநிலையில்தான் தனது நண்பர் தேனி மருத்துவ கல்லூரி முதல்வராக இருப்பதை வைத்துதான் டாக்டர் வெங்கடேசன் தனது மகன் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதியது தெரியக்கூடாது என்பதற்காக தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்த்திருக்கிறார். ஆனால் உதித்சூர்யா கல்லூரியில் சேரும் போதே சான்றிதழை சில பேராசிரியர்கள்  சரிபார்த்தனர் அப்போது  நீட்தேர்வு ஹால் டிக்கெட்டில் உள்ள படத்திற்கும் உதித்சூர்யா படத்திற்கும் வேறுபாடுகள் இருக்கிறது அதன் மூலம் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்திருக்கலாம் என்று கல்லூரி முதல்வரிடம் கூறியிருக்கிறார்கள்.

 

College Principal Seeks to Unpublished in neet exam abuse information !!


ஆனால் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் அதைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில்தான் உதித் சூர்யா மேல் பெட்டிஷன் வந்ததின் மூலம் ஆள்மாறாட்டம் செய்தது வெளியே தெரியவந்தது. உடனே தனது நண்பர் டாக்டர் வெங்கடேசனை வரவழைத்து ஆள் மாறாட்டம் செய்தது வெளியே தெரிந்து விட்டது அதனால் இனிமேல் உதித் சூர்யா இங்கு படிக்கவும் முடியாது அவனுடைய வாழ்க்கையும் வீணாகிவிடும் அதனால் இனிமேல் படிப்பை தொடர விருப்பம் இல்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு பையனை கூட்டி கொண்டு போய்விடுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன் அடிப்படையில்தான் உதித்சூர்யாவும் படிக்க விருப்பம் இல்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு போய்விட்டார். அதன்பிறகு இந்த விஷயம் மீடியாக்கள் மூலம் வெளியே தெரியவும்தான்  வேறு வழியில்லாமல் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த அளவுக்கு தன் நண்பரின் மகன் ஆள்மாறாட்டம் மூலம் கல்லூரியில் சேர்ந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்று கல்லூரி முதல்வர் ஒருபுறம் மூடி மறைக்க முயற்சி செய்து இருக்கிறார் என்ற பேச்சும் பரவலாக பேசப்பட்டும் வருகிறது. நீட் தேர்வில் இப்படியொரு மூலம் ஆள் மாறாட்டம் செய்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.