Skip to main content

தன்பாலின உறவு; பெண் எஞ்சினீயர் தற்கொலை முயற்சி

Published on 11/11/2022 | Edited on 11/11/2022

 

college student who was lesbian relationship with  female engineer

 

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயோடெக் படித்து வருகிறார். இவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண்  என்ஜினீயர் ஒருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக ஒன்றாகவும் வாழ்ந்து வந்திருக்கின்றனர். 

 

இந்நிலையில், கல்லூரி மாணவியின் பெற்றோர் தனது மகளைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், இறுதியாக மாணவி கோவையில் பெண் என்ஜினீயருடன் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

 

அதன்பிறகு இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், மாணவியுடன் இருந்த பெண்  என்ஜினீயர், மாணவி படித்து வரும் அதே கல்லூரியில்  என்ஜினீயரிங் படித்து வந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட, அருகருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் இருவரும் சகஜமாகப் பழக அவர்களுக்குள் நெருக்கம் ஏற்படவே தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறியுள்ளனர். அதன் பிறகு தனது படிப்பு முடிந்த பிறகு சீனியர் மாணவி கோவைக்கு வேலைக்கு சென்றதால் இருவரும் ஒன்றாகச் சந்திக்கும் நேரம் குறைந்திருக்கிறது. இதனிடையே இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்குத் தெரிய வர, மாணவியைக் கண்டித்துள்ளனர். இதனால் மாணவி வீட்டை விட்டு வெளியேறி பெண் என்ஜினீயருடன்  கோவையில் வசித்து வந்திருக்கிறார் எனத் தெரியவந்தது.

 

இதையடுத்து, இருவரும் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, போலீசார் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்தனர். அப்போது, பெண்  என்ஜினீயர்  தன்பாலின ஈர்ப்பாளர்கள் உறவில் ஈடுபட்டது தவறு என்று சொல்லியதாகச் சொல்லப்படுகிறது. பிறகு  திடீரென அங்குள்ள கழிப்பறைக்குச் சென்று கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த பெண்ணை போலீசார் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அந்த பெண்ணிடம் பென்னாகரம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரவீனா சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றார்.

 

இதனிடையே, அந்த கல்லூரி மாணவிக்கு பெற்றோருடன் செல்லுமாறு போலீசார் கவுன்சிலிங் கொடுத்தனர். ஆனால் அதனை மறுத்த அந்த மாணவி, கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்த எங்களுக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது. எனக்கு எல்லாமே என் பெண் தோழிதான். காப்பகத்திற்கு வேண்டுமானால் செல்கிறேன். ஆனால், என் பெற்றோருடன் மட்டும் நான் சொல்ல மாட்டேன் எனக் கூற, அவரின் விருப்பப்படியே காப்பகத்திற்கு அனுப்பிவைத்தனர்.  இந்திய அரசியலமைப்பு சட்டம் 377 படி தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு  சேர்ந்து வாழ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.