Advertisment

கல்லூரியில் பேரிடர் மீட்பு பயிற்சி: பயிற்சியாளரின் அலட்சியத்தால், பரிதாபமாக உயிரிழந்த மாணவி!

dead

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சியின் போது பயிற்சியாளர் கீழே தள்ளியதில் தடுமாறி விழுந்த மாணவி படுகாயமடைந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நரசிபுரத்தில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இரண்டாமாண்டு பிபிஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார் 19 வயதான லோகஸ்வரி என்ற மாணவி. இவரது தந்தை நல்லாகவுண்டர். நாதேகவுண்டன் புதூரில் வசித்து வருகிறார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்நிலையில் நேற்று கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகம் 20 மாணவர்களுக்கு நேற்று மாலை 4 மணியளவில் பயிற்சி அளித்தார்.

அப்போது இரண்டாவது மாடியில் இருந்து பேரிடர் காலங்களில் எப்படி தப்பித்துக்கொள்வது என்பது பற்றி செய்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது, லோகேஸ்வரி என்ற மாணவி கீழே குதிக்க பயந்தபடி அமர்ந்திருந்தார். அவரை கீழே குதிக்கும்படி தெரிவித்த பயற்சியாளர் ஆறுமுகம் லோகேஸ்வரியை கீழே தள்ளிவிட்டுள்ளார்.

girl

அதில், நிலைதடுமாறி முதல் மாடியில் இருந்த சன் சேடின் மேலே விழுந்த லோகேஸ்வரியின் பின் தலையிலும் வலது கழுத்துப்பகுதியிலும் அடிபட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக லோகேஸ்வரி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கிருந்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

அரசு மருத்துவமனையில் லோகேஸ்வரி வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து பிரேத பரிசோதனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குறித்து வழக்கு பதிவு செய்து பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியை பயற்சி என்ற பெயரில் கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், எந்த அடிப்படையில் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. யார் அனுமதி அளித்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் உயர்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logeshwari college student
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe