Skip to main content

மாணவ, மாணவிகள் போராட்டம் - ஆத்திரத்தில் செல்போனை உடைத்த கல்லூரி முதல்வர்

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

 

  திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றதால் மாணவ மாணவிகள்,  பெற்றோர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


 
   விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது.  இந்த கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் 5-ஆம் தேதி முதல்   பி.ஏ .பிஎஸ்சி. பி.காம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு  நடைபெற்று வருகிறது. 

 

v

 

இன்று இறுதி கட்ட மாணவர் சேர்க்கை என்பதால்  கல்லூரியில் சேர 200க்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கடந்த மூன்று மாதங்களாக காத்திருந்தவர்கள் இன்று அனைவருக்கும் சேர்க்கை வழங்குவதாக கூறப்பட்டதாக தெரிகிறது.  ஆனால் மாலை கல்லூரி முதல்வர் சுரேஷ் மாணவ மாணவிகள் பெற்றோர்களிடம் கல்லூரியில் அட்மிஷன் முடிந்து விட்டதாகவும் இனிமேல் கல்லூரிக்கு அட்மின் சமந்தமாக யாரும் வரவேண்டாம் என்று கூறினார்.

 

இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடுமாறு கேட்டனர். வழங்காததால் ஆத்திரமடைந்த திமுக நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக கூறிய கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். ஆத்திரமடைந்த கல்லூரி முதல்வர் சுரேஷ்,  தான் வைத்திருந்த செல்போனை உடைத்து விட்டு காரில் ஏறி சென்றுவிட்டார் .

 

இதுகுறித்து திமுக நகர செயலாளர் பூக்கடை கணேசன் கூறியதாவது: இந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் 5ஆயிரம் முதல் 15ஆயிரம் வரை வாங்கொண்டு முறைகேடு நடைபெறுவதாகவும் இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் முறைகேடு குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் கூறினர். இதனால் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.

Next Story

படியில் தொங்கியபடி பயணம்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Travel hanging on a step; 3 college students were loss their live

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் தனியார் பேருந்தின் படியில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் படியில் தொங்கியபடி பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் காமேஷ், மோனிஷ், தனுஷ் ஆகிய மூன்று இளைஞர்களின் உடல்களும் பிரேப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.