Skip to main content

நெடுவாசல் கிராமத்தில் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூட கலெக்டர் உத்தரவு

Published on 20/06/2018 | Edited on 20/06/2018

நெடுவாசல் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கள்ளதனமாக மது விற்பனை செய்யக் கூடாது என்றும் கிராம கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கிராம சபைக் கூட்டம் தொடங்கி மாவட்ட ஆட்சியர், மாவட்ட டாஸ்மாக் மேலாளர், வட்டாட்சியர் உள்பட பலரிடம் மனு கொடுத்த பொதுமக்கள் கிராம கூட்டத்திலும் முடிவெடுத்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் 17 ந் தேதியுடன் டாஸ்மாக் கடை இயங்காது என்று உறுதி அளித்தனர். அதனால் 18 ந் தேதி டாஸ்மாக் கடையை திறந்தால் முற்றுகையிடப்போவதாக பொதுமக்கள் அறிவித்தனர். ஆனால் 18 ந் தேதி டாஸ்மாக் கடை திறக்கவில்லை. ஆனால் கடையை நிரந்தரமாக மூட கால அவகாசம் வேண்டும் என்று மாவட்ட மேலாளர் சௌந்தரபாண்டியன் மற்றும் வட்டாட்ச்சியர் ரெத்தினாவதி ஆகியோர் கிராம மக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனால் மாவட்ட ஆட்சியரின் கவணத்திற்கு கொண்டு செல்வதாக பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் சென்றனர்.
 

Collector's order to permanently close the Tashkm Shop in Neduvasal village



 

டாஸ்மாக் மேலாளர் கிராம மக்களின் முடிவை மாவட்ட ஆட்சியர் கணேசிடம் கூறிய பிறகு கிராம பொதுமக்கள் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று கூறுவதால் அந்த கடையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்தார். அதன் பிறகு அடுத்த நாள் காலை  அவசர கிராம  கூட்டத்திற்கு ஒலிபெருக்கி விளம்பரம் மூலம் கிராம மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் படி கூடிய அவசர கிராம கூட்டத்தில் நெடுவாசல் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்ற கிராமத்தின் கோரிக்கையை ஏற்று கடையை நிரந்தரமாக மூடிய மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி கூறிக்கொள்வதுடன் இனிமேல் நெடுவாசல் கிராம எல்லைக்குள் எந்த இடத்திலும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யக் கூடாது மீறி மது விற்பனை செய்யப்பட்டால் கிராமத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 

இந்த நிலையில் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டதால் கடையில் இருப்பு இருந்த மது வகைகள் மற்றும் தளவாடி பொருட்களை டாஸ்மாக் ஊழியர்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதியடைந்திருப்பதாக கூறினார்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.