திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளை கண்டித்து பேசிய ஆடியோ துறை ஊழியர்கள் அதிருத்தியடைய வைத்துவிட்டது.
இதனை கண்டிக்கும் விதமான ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சங்கம், அக்டோபர் 20 ந்தேதி திருவண்ணாமலையில் கூடி, ஒன்றிய அளவில் விளக்ககூட்டம், துறையின் உயர் அதிகாரிகளை சந்தித்து முறையீடு செய்வது என முடிவு செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 21 ந்தேதிசெங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரநாத் தலைமையில் அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில்மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.