தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் கடலூர் மண்டலத்தில் கடந்த 2022- 2023 ஆம் ஆண்டின் பருவத்தில் 258 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு 2 லட்சத்து 44 ஆயிரத்து 62.600மெட்ரிக்டன்நெல் கொள்முதல் செய்யப்பட்டு 31 ஆயிரத்து 950 விவசாயிகள் பயன் அடைந்தார்கள். மேலும் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் மற்றும்ஸ்ரீமுஷ்ணம்ஆகிய வட்டங்களில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டு 600.280மெட்ரிக்டன்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 2023-2024 ஆம்பருவத்திற்குதொடக்கமாககடலூர் மாவட்டத்தில் வட்டம் வாரியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.காட்டுமன்னார்கோயிலில்- 34,ஸ்ரீமுஷ்ணத்தில்- 35, விருத்தாசலத்தில் - 24, சிதம்பரத்தில் - 9, திட்டக்குடியில் - 15,புவனகிரியில்- 7,குறிஞ்சிப்பாடியில்- 6,வேப்பூரில்- 12, கடலூரில் - 7, பண்ருட்டியில் - 4 ஆக மொத்தம் 153 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் அறுவடைபகுதிக்குசென்று 22ம் தேதி முதல் விருத்தாசலம் மற்றும்ஸ்ரீமுஷ்ணம்வட்டத்தில்திறந்துவைக்கப்பட்டுச்செயல்படுத்தப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம்சன்னாரகம் (ஏகிரேட்)குவிண்டால்ஒன்றிற்கு ரூ.2 ஆயிரத்து 310,பொதுரகம்(காமன்)குவிண்டால்ஒன்றிற்கு ரூ.2 ஆயிரத்து 265 -ம் தரப்படுகிறது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (22.01.2024) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக கே.எம்.எஸ் 2023-24 ஆம் பருவத்திற்கான நடமாடும் நெல் கொள்முதல் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்தம்புராஜ்,கொடியசைத்துதொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர்இராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)ஜெகதீஸ்வரன், வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்(விவசாயம்)இரவிச்சந்திரன்,நுகர்பொருள்வாணிபக்கழகமண்டல மேலாளர் குமரவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.