விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பேசிய மாவட்ட ஆட்சியர், “விவசாயிகள் அன்பானவர்கள் அவர்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையினை வழங்காத சர்க்கரை ஆலைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் விவசாயிகள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் அலுவலர்கள் மீதும் எந்த ஒரு தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று பேசினார்.