Skip to main content

கலெக்டரை ஒதுக்கி தள்ளிய அரசியல்வாதிகள்

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
Tiruchirappalli



எப்போதும் அரசு நிகழ்ச்சி என்றால் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் முன்னிலையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் மூலமே நடத்தப்படும். ஆனால் திருச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் ராசாமணியை பின்னுக்கு தள்ளி ஒதுக்கிய சம்பவம் அதிகாரிகள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

சமீபகாலமாக திருச்சியில் உள்ள அமைச்சர்கள், மா.செ. இடையே நடக்கும் போட்டி அரசியலில் அரசு அதிகாரிகள் யாருக்கு முன்னிலை கொடுப்பது என்று தெரியாமல் குழம்பி போய் மாறி மாறி திட்டு வாங்கி அரசியல்வாதிகள் யாரையும் அழைக்காமல் திருச்சி மாநகராட்சியை பொறுத்த வரையில் அதிகாரிகளே விழாவின் சிறப்பு அழைப்பாளராக மாறி திறந்து வைக்க ஆரம்பித்தனர். இது அரசியல்வாதிகள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
 

இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 16 எம்ஆர்ஐ ஸ்கேன் இயக்க துவக்க விழா நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.பி. குமார், மருத்துவமனை டீன் அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் உள்ளிட்டோர் முன்வரிசையில் அமர்ந்து பேட்டியளித்தனர். அரசு நிகழ்ச்சியாக இருந்தபோதிலும் இதில் கலெக்டரை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் முன்வரிசையில் இடம் கிடைக்காமல் கலெக்டர் கட்சி பிரமுகர்களுடன் பின்னால் பரிதாபமாக அமர்ந்திருந்தார். 3 அமைச்சர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தும் கலெக்டரை பின்னுக்கு தள்ளி அவர் யாரோ ஒருவர் போன்று ஒதுக்கினார்கள் அரசியல்வாதிகள். அது போல ஸ்கேன் மிசினை பார்க்கும் போது கலெக்டர் இருக்கிற இடமே தெரியவில்லை. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.