Skip to main content

தேர்தலை நிறுத்த நினைக்கும் கலெக்டர்: அம்பலப்படுத்திய வேட்பாளர் ஜோதிமணி

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

கரூர் எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணியும் அதிமுக சார்பில் தம்பித்துரையும் போட்டியிடுகிறன்றனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் போதே திட்டமிட்டு நேரம் கடத்துவதாக சொல்லி செந்தில்பாலாஜி தரப்பினர் குற்றம் சாட்டிய பின்பு சிறிது தள்ளுமுள்ளுக்கு பிறகு வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு பணி செய்ய விடாமல் தடுத்தாக செந்தில்பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

 

 

இதை அடுத்து இறுதி பிரச்சாரத்திற்கு அனுமதி வாங்க ஆன்லைனில் விண்ணப்பம் செய்திருந்தனர் செந்தில்பாலாஜி தரப்பினர். ஆனால் கரூர் கோட்டாச்சியர் திமுக கொடுத்த ஆன்லைனில் விண்ணப்பத்தை நிராகரித்தார். அதிமுகவிற்கு அனுமதி கொடுத்திருந்தார். அதில் மாலை 1 மணியிலிருந்து 6 மணி வரை என்று கொடுத்திருந்தார். 

 

attack

 

இதன் பிறகு வேட்பாளர் ஜோதிமணியுடன் செந்தில்பாலாஜி கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி அதிமுக கொடுத்த அனுமதி கடிதம் போலியானது என்றும் அவர்கள் கொடுத்திருந்த நேரம் 1.49 மணி முதல் 1.49 மணி வரை தவறாக எழுதிக்கொடுத்தை எந்த அடிப்படையில் ஏற்றுக்கொண்டிர்கள் என்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த தவறு நிர்வாகம் பக்கம் என்று உணர்ந்து கொண்ட கோட்டாசியர் அதிமுகவிற்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்து விட்டு திமுகவிற்கு அனுமதி வாங்கினார். அதில் மாலை 4 மணியிலிருந்து 6 மணிவரை என்று அனுமதி வாங்கினார். 

 

இதற்கு இடையில் அதிமுகவிற்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்த தகவல் வெளியானவுடன் அமைச்சர் விஜயாஸ்கர் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து திட்டமிட்டபடி மதியம் 1 மணியிலிருந்து 6 மணி வரை பிரச்சாரம் நடைபெறும் என்று அறிவித்தார். 

 

இதற்கு இடையில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தி.மு.க. வழக்கறிஞர் செந்தில் தலைமையில் கொடுத்த அனுமதியை ஏன் ரத்து செய்தீர்கள் என்று மாறி மாறி கேட்ட அதிர்ச்சியடைந்த கலெக்டர் வீட்டில் உள்ளே மறைந்து கொண்டார். 

 

அதன் பிறகு வேட்பாளர் ஜோதிமணியிடமும், கரூர் சின்னசாமியிடமும் நள்ளிரவு தொலை பேசியில் தொடர்பு கொண்டு என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. அதனால் தேர்தலை நடத்த முடியுமான என்று தெரியவில்லை ஆகவே தேர்தலை நிறுத்த தான் தலைமைக்கு தகவல் கொடுக்க போகிறேன் என்று சொல்லியிருக்கார் அதற்கு வேட்பாளர் எங்கள் பக்கம் இருந்து எந்த பிரச்சனையும் வராது என்று உறுதியளித்திருக்கிறார். 

 

attack

 

காலையில் திமுக. சார்பில் உயர்நீதிமன்றத்தில் இறுதி நாள் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்க மனு அளித்திருந்தனர். உடனே அதிமுகவினரும் மனு கொடுத்திருந்தனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை சுமார் 100-க்கும் மேற்பட்டோர் 20 முதல் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்து எனது உயிருக்கும், எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே நுழைய முயன்றனர். நான் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் புகார் செய்தேன். மாவட்ட போலீஸ் எஸ்.பி. சம்பவ இடத்திற்கு வந்து எங்களை பாதுகாத்தார். நடுநிலையோடு பணியாற்றும் எங்களை தடுப்பது எந்த விதத்தில் நியாயம். செந்தில் பாலாஜி, ஜோதிமணி மற்றும் தி.மு.க.வினர் நேற்று முன்தினம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரை கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி சுமார் 6 மணி நேரம் சிறைப்பிடித்து வைத்திருந்தனர். அவரும் மனிதர் தானே சிறைப்பிடித்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் தர்மசங்கடமான நிலையில் பிரசாரத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார். நேற்று இரவு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து இறுதிகட்ட பிரசாரத்திற்கு அனுமதி கேட்டிருந்தார். அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தேன்.

 

 

கலெக்டர் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் போதே திமுக தரப்பிற்கு பிரச்சாரம் செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கலெக்டர் உடனே இரண்டு கட்சியினருக்கும் இறுதி கட்ட பிரச்சாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். 

 

attack

 

இதற்கு இடையில் திமுக தரப்பில் நீதிமன்ற அனுமதி இருந்தால் வேட்பாளர் ஜோதிமணி தலைமையில் நாஞ்சில்சம்பத், கே.என்.நேரு ஆகியோருடன் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் அந்த பக்கம் வந்த அதிமுகவினர் கற்களை நோக்கி வீச அந்த இடமே கலவர பூமியாக மாறியது. உடனே போலிஸ் 144 தடை உத்தரவு போட்டு அந்த இடத்தில் வெளியூர் ஆட்களை அப்புறப்படுத்தினார்கள். 

 

 

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தவுடன் முறைபடி ஆன்லைன் மூறையில் விண்ணப்பம் செய்ததை திட்டமிட்ட பிரச்சார அனுமதியில் குளறுபடி செய்தும் அனுமதி மறுத்த நிலையிலும் பிரச்சனையை பெரிதாக்க நினைக்கையில் நீதிமன்ற அனுமதியுடன் பிரச்சாரத்தை தொடர்ந்தால் கலெக்டர் தனக்கு கொலை மிரட்டல் என்று சொல்லி தேர்தலை நிறுத்த திட்டமிட்டிருக்கிறார் என்கிறார் கரூர் மாவட்ட திமுகவினர். 

 

கரூர் மாவட்ட  ஆட்சியர் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மற்றும் 20க்கும் மேற்பட்டோர் மீது தான்தோன்றி போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு  செய்துள்ளனர். இன்னும் பதட்டநிலை அப்படியே இருக்கிறது கரூர் எம்.பி. தொகுதி ! 

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டு மக்கள் நலனைக் காக்கும் அரசு மத்தியில் அமையவேண்டும்” - அருண் நேரு தீவிர பிரச்சாரம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Arun Nehru campaigned hard in Karur

கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர்  அருண் நேரு கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது செல்லும் இடமெல்லாம் அதிர்வேட்டு முழங்க சால்வை அணிவித்து உற்சாகமாக  பொதுமக்கள் வரவேற்றனர். மருதூர் பேரூராட்சி பகுதி கணேசபுரத்தில் முதல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து வைகைநல்லூர் பஞ்சாயத்து, தாளியாம்பட்டி, வை.புதூர், பாப்பக்காபட்டி பஞ்சாயத்து மலையாண்டிபட்டி, வாழைக்கிணம், தொண்ட மாங்கிணம், நாடக்காப்பட்டி, குழந்தை பட்டி, சுக்காம்பட்டி, முதலைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று வாக்காளர்களைச் சந்தித்து  உதயசூரியனுக்கு  வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் அருண் நேரு பேசியதாவது, “உங்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்பதை பெருமையாக எண்ணுகிறேன். மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்கிற பாஜக அரசு, தமிழ்நாட்டு மக்கள்  நலனுக்காக எதையும் செய்யவில்லை. கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் நமது முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் செய்த சாதனைகளை சொல்லுகிறார். ஆனால்  பாஜக அரசு எதையும் செய்யவில்லை என்றாலும் நாம் அனுமதி கோரும் நல்ல  திட்டங்களைத் தொடர்ந்து தடுத்து வந்ததோடு, நாம் செலுத்துகிற வரிப்பணத்தில் நமக்குத் தர வேண்டிய நிதியைக் கூடத் தராமல் பாரபட்சம் செய்கிற ஒரு அரசாக பாஜக அரசு உள்ளது. இதற்கு காரணம் தமிழ்நாடு முன்னேறி விடும் என்பதுதான். இதையெல்லாம் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இத்தனை முட்டு கட்டைகளையும் தாண்டி, நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலத்திட்டங்களை ஜாதி, மதம் பாராமல் எல்லோருக்கும் எல்லாம் என்ற சமூகநீதி அரசியலை, திராவிட மாடல்  அரசியலை  முன்னெடுத்து நலத்திட்டங்களை உங்களுக்கு வாரி வழங்கி வருகிறார்கள். முட்டுக்கட்டை போடுகிற பாஜக அரசுக்கு பதிலாக மத்தியில் நமக்கு சாதகமான அரசு அமைந்தால் நாம் இன்னும் எவ்வளவு வேகமாக  மக்கள் நலத் திட்டங்களை  தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர முடியும் என்பதை எண்ணிப் பாருங்கள். அப்போது தான் தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகக் கொண்டு வர முடியும்.  அப்போது தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வர முடியும். அதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். மத்தியில் 10 ஆண்டுகாலம் ஆட்சி நடத்திய பாஜக தமிழ்நாட்டிற்கு என்ன செய்தோம் என்பதை சொல்ல முடியாமல் மக்களை திசை திருப்பி வாக்கு சேகரிக்க நினைக்கிறார்கள். இதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே நமக்கு சாதகமான இந்தியா கூட்டணி தலைமையிலான அரசு மத்தியில் அமைய வேண்டும். அதற்கான தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும். தற்போது சில தினங்களாகவே ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையில் வருகிற செய்தி எல்லாம் நீங்கள் அறிவீர்கள். என்ன அந்தச் செய்தி என்றால் தென் மாநிலங்கள் மட்டுமல்ல, வட மாநில ஊடகங்கள் கூட அதைத்தான் சொல்கின்றன. எல்லாம் என்ன சொல்கிறார்கள்? தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்பதுதான் அந்த செய்தி. அப்போது தமிழ்நாட்டின் பங்கு அதிகமாக இருந்தால்தான் நாம் நமக்கு சாதகமான மத்திய அரசிடம் இருந்து நல்ல பல வளர்ச்சி திட்டங்களைப் பெற முடியும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே காவிரியில் செக் டேம் கட்ட அனுமதி கேட்டு வருகிறோம். ஆனால்  அனுமதி தராமல் கிடப்பில் போட்டு விட்டார்கள். இப்படி முட்டுக்கட்டை போடும் பாஜகவிற்குப் பதிலாக நமக்கு சாதகமான இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைந்தால், உங்களுடைய குடிநீர் பிரச்சனைகளைக் கட்டாயம் தீர்க்கப் பாடுபடுவேன். முட்டுக்கட்டை போட்டு மக்கள் நலத் திட்டங்களைத் தடுப்பதற்கு  ஒரு ஆட்சி தேவையில்லை. எனவே மக்களுக்கு கொடுக்கும் அரசை மத்தியில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்திட  நீங்கள் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளரான எனக்கு வருகிற 19ஆம் தேதி வாக்கு எந்திரத்தில் முதல் பட்டனாக உள்ள உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளைப் பதிவு செய்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என உங்கள் வீட்டுப் பிள்ளையாக பணிவோடு  கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

வாக்கு சேகரிப்பின் போது குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ ராமர், தொகுதி பொறுப்பாளர் பரணி கார்த்திகேயன், மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சூரியனூர் சந்திரன், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் பொய்யாமணி தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வரகூர்  கதிரவன், மேற்கு ஒன்றிய செயலாளர் பஞ்சப்பட்டி கரிகாலன், தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார், இரும்பூதிப்பட்டி வெற்றிவேல், குளித்தலை நகர துணைச் செயலாளர் செந்தில்குமார், நகர பொருளாளர் தமிழரசன், மலையாண்டிபட்டி சுப்பு உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளான விசிக, கம்யூனிஸ்ட் கட்சி  நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story

''ராகுல் காந்தியே வருக... புதிய இந்தியாவை தருக...''-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
"Rahul Gandhi come... bring a new India..."- Chief Minister M.K.Stal's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி தற்பொழுது கோவை வந்துள்ள நிலையில் இருவரும் ஒரே மேடையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''கோவை தொகுதியில் திமுகவினுடைய வேட்பாளராக போட்டியிடும் கணபதி ராஜ்குமார் இந்த மண்ணின் மைந்தர். கோவையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக பணியாற்றியவர். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களித்து வாக்களிக்க வேண்டும். வெற்றி என்றால் சாதாரண வெற்றி அல்ல மாபெரும் வெற்றியை தர வேண்டும். மார்ச் 24 ஆம் தேதி என்னுடைய பரப்புரை பயணத்தை திருச்சியில் தொடங்கினேன். ஒவ்வொரு கூட்டமும் மாநாடு போல நடந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்தக் கோவை பொள்ளாச்சி கூட்டத்தையும் வெற்றிவிழா மாநாட்டை போல ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் முத்துசாமி, சுவாமிநாதன் மற்றும் செந்தில் பாலாஜிக்கும் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டம் மாநாடு போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இதற்கு இந்தியாவின் உடைய இளம் தலைவர் ராகுல் காந்தி மகுடம் வைத்தது போல இங்கே பங்கேற்றுள்ளார். நாடு சந்திக்க இருக்கக்கூடிய இரண்டாம் விடுதலைப் போராட்டத்தின் காங்கிரஸ் கட்சியினுடைய கைகளை திமுக வலுப்படுத்தும். திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இருக்கின்ற கூட்டணி கட்சி. அதே நேரத்தில் எப்பொழுதும் வெல்லும் கூட்டணி நம் கூட்டணி. சோனியா காந்தி மீதும், சகோதரர் ராகுல் காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் தனியாக அன்பும் பாசமும் கொண்டவர்கள். அப்படிப்பட்ட ராகுலை நம்ம ஸ்டைலில் வரவேற்க வேண்டுமென்றால், 'ராகுல் அவர்களே வருக புதிய இந்தியாவிற்கு விடியல் தருக' என இந்தியாவின் தென்முனையான தமிழ்நாட்டில் இருந்து நான் வரவேற்கிறேன்.

பாஜக வந்தால் கோவையின் அமைதி போய்விடும். ஜி.டி.நாயுடு பெயரில் கோவையில் நூலக அரங்கம் அமைக்கப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்டம் திருப்பூர் வரை நீட்டிக்கப்படும். திமுக அரசின் நெருக்கடி காலத்திலேயே இவ்வளவு செய்கிறோம் என்றால் இந்தியா கூட்டணி வந்த பிறகு நிறைய செய்வோம். மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது'' என்றார்.