Skip to main content

கலெக்டர் – டி.ஆர்.ஓ மோதல் – பாதிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள்

Published on 21/09/2020 | Edited on 21/09/2020

 

 

Collector - DRO Conflict - Affected Revenue officers

 

 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவராக கந்தசாமி உள்ளார். மாவட்ட வருவாய்த்துறை அலுவலராக ரத்தினசாமி உள்ளார். கரோனா பரவலை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கலெக்டர் – டி.ஆர்.ஓ இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல விவகாரங்கள் நடக்காமல் முடங்கியுள்ளன என்கிற குரல்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வருவாய்த்துறை ஊழியர்களிடையே எதிரொலிக்கின்றன.

 

இதுப்பற்றி நம்மிடம் பேசிய வருவாயத்துறையைச் சேர்ந்தவர்கள், “டி.ஆர்.ஓ. நேர்மையானவர். அவரை சந்திக்க பொதுமக்கள் வந்தால் யாரையும் காக்கவைக்கமாட்டார். உடனே பார்த்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்டு அதனை சரிசெய்ய பார்ப்பார். அதேநேரத்தில் சில விவகாரங்களில் முடிவு எடுப்பதில் ரொம்பவே தயங்கினார். இது கலெக்டரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

அதேநேரத்தில் கடந்த மார்ச் மாதம் கரோனா பரவல் தொடங்கியது முதல் டி.ஆர்.ஓ. பயந்துவிட்டார். தன் அலுவலக ஊழியர்கள் உட்பட யாரையும் சந்திப்பதை தவிர்த்தார். கரோனா தொடர்பான பணிகளில், அலுவலக கூட்டங்களில் கூட அவர் கலந்து கொள்ளாமல் ஒதுங்கினார். இதனால் டி.ஆர்.ஓ செய்ய வேண்டிய பணிகளை பயிற்சி உதவி ஆட்சியர் மந்தாகினி தான் செய்துவந்தார்.

 

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு முதல்வர் வருகையின்போது வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், முதல்வர் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுயெல்லாம் கலெக்டரை கோப்படுத்திவிட்டது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் கடந்த சில தினங்களாக டி.ஆர்.ஓ. அலுவலகத்துக்கே வரவில்லை.

 

இரண்டு தினங்களுக்கு முன்பு வருவாய்த்துறை ஆய்வாளர், உதவியாளர்கள் பதவி உயர்வுக்கான பைல் அவரது கையெழுத்துக்கு அவசரம் எனச்சொல்லி அவரது கேம்ப் ஆபிஸ்க்கு அனுப்பிவைத்துள்ளனர். அந்த பைலில் அவர் கையெழுத்திடாததால் பதவி உயர்வில் செல்ல வேண்டியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்” என்றார்கள்.

 

வேறு சில அதிகாரிகளோ, கரோனாவை கண்டு பயப்படக்காரணம், அவரது குழந்தையை நினைத்து தான். அதனால்தான் அவர் தயங்குகிறார். கலெக்டர் – டி.ஆர்.ஓ மோதல் என்பது கரோனாவால் வந்ததுல்ல. அதற்கு முன்பிருந்தே அலுவல் ரீதியாக சில சில நெருடல்கள் இருவருக்கும் இருந்தாலும், சமீபத்தில் தாசில்தார்கள் இடமாற்றம்தான் பெரிய மோதலை உருவாக்கிவிட்டது.

 

இடமாற்றம் செய்யப்பட்ட ஒரு பெண் அதிகாரிக்காக, ஆளும்கட்சியை சேர்ந்த அந்த முக்கிய அதிகாரி கலெக்டரிடம் கடினமாக பேசியுள்ளார். அவர் டி.ஆர்.ஓவை காட்ட அவரிடமும் எகிறியுள்ளார். இதில்தான் இருவருக்கும் முட்டிக்கொண்டது என்கிறார்கள். இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.