Skip to main content

கரூர் கலெக்டர் ஆடியோ விவகாரம் - டிஐஜியிடம் புகார்!!

Published on 09/11/2019 | Edited on 09/11/2019

திருச்சி மணப்பாறையில் ஆழ்துணை கிணற்றில் 2 வயது சிறுவன் சுர்ஜித் தவறி விழுந்து இறந்த சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பராமரிப்பு இன்றி திறந்தே கிடக்கும் ஆழ்துணை கிணறுகளை கண்டறிந்து மூட வேண்டும் என்று அந்த அந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திறந்து கிடந்த ஆழ்துணை கிணறுகளை அதிகாரிகள் கண்டறிந்து துரிதமாக மூடும்பணியில் ஈடுபட்டனர்.
 

collector audio issue


இந்த நிலையில் கரூர் மாவட்டம் செம்பியநத்தம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு மூடப்படாமல் இருப்பதை , கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் இளைஞர் ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கையில் மாவட்ட ஆட்சியர் உங்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் உங்கள் பகுதியில் பிடிஓ வை தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் நான் என்ன உனக்கு சரவணபவன் சர்வரா என்ற கேள்வியையும் கேட்டு போனை வைடா ராஸ்கல் என்று பேசி அலைபேசியை வைத்த உரையாடல் செய்தி சமூக வலைத்தளங்களில் தொலைக் காட்சிகளிலும் செய்தியாக வெளிவந்தது.

இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தொலைபேசியில் பதிவாகியுள்ள குரல் என்னுடையது இல்லை என்றும் நான் அப்படி எந்த இளைஞருடன் அலைபேசியில் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தது அச்செய்தி சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

மேற்படி சம்பவத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெயரில் ஒலிப்பதிவு செய்து வெளியிட்ட இளைஞரைக் கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர் பெரகம்பி சீனிவாசன் காவல்துறை துணைத் தலைவரிடம் மனு அளித்தார்.

இது குறித்து அவர் நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் பெரகம்பி சீனிவாசன் பேசுகையில் "கடந்த ஒரு வாரமாக கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேசிய அந்த குரல் சமூகவலைதளங்கள் மற்றும் தொலைகாட்சிகளில் வெளியாகி ஒரு மாவட்டத்தின் கலெக்டர் இப்படி பேசலமா? என பொதுமக்கள் இடையே பெரிய ஆதங்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த ஆடியோ வெளியானவுடன் கரூர் ஆட்சித்தலைவர் அன்பழகன் உடனே அது என்னுடைய குரல் அல்ல என்று மறுப்பு தெரிவித்தார்.


மாவட்ட ஆட்சித்தலைவர் உண்மையில் பேச வில்லை என்றால் உண்மையில் அந்த ஆடியோவை தயாரித்து வெளியிட்டது யார்? இந்த ஆடியோ பிண்ணனியில் என்ன நடந்தது என்பதை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் என்கிற முறையில் உண்மையை காவல்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் மனு மத்திய மண்டல துணைத்தலைவரிடம் கொடுத்துள்ளேன். "போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் குறைவு; ஆட்சியரின் உத்தரவால் பரபரப்பு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Nutrient organizer suspended due to shortage of eggs in student rations

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

பிச்சவாரத்தில் படகு சவாரி ரத்து; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Boat ride canceled in Bichhiwara due to rain

 

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் உள்ள சதுப்பு நில காடுகளுக்கு இடையே தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

 

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டிசம்பர் 2 மற்றும் 3-ந் தேதி ஆகிய இரு தினங்களுக்கு பிச்சாவரம் படகு இல்லத்தில் பயணிகளுக்கு அனுமதி இல்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவித்துள்ளார். எனவே சுற்றுலாப் பயணிகள் பிச்சவாரத்திற்கு வந்து படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.