Skip to main content

கோடை வெப்பத்தை சமாளிக்க இளநீர், நுங்கு, வெள்ளரி விற்பனை ஜோர்

Published on 01/05/2019 | Edited on 01/05/2019

கோடை வெயிலின் அளவு 90 டிகிரியை தாண்டியுள்ளதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெய்யிலின் தாக்கத்தால்  உடல் சூடு அதிகரித்து பல்வேறு உடல் கோளாறுகளால் மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். உடலின் வெப்பம் அதிகரிப்பதால் நீர் சுருக்கு, மஞ்சள் காமாலை, நீர் சத்து குறைதல், வயிற்றுப்போக்கு, சரும நோய்கள் என பல்வேறு வெய்யில் கால நோய்கள் தாக்குகின்றன. இதனால் வெளி வேலைகளுக்கு பகலில் செல்வதற்கே அஞ்சுகின்றனர் பொது மக்கள். ஆனாலும் தவிர்க்க முடியாத காராணங்களால், வேலைப்பளுவால் வெளியில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அவ்வாறு செல்லும் நேரங்களில் வெய்யிலின் சூட்டை தணிக்கவும், வெப்பத்தினால் ஏற்படும்  நோய் தாக்குதலிலிருந்து பாதுகாத்து கொள்ளவும் குளிர்பானங்களை, இயற்கையான உணவு பண்டங்களையும் விரும்பி உண்கின்றனர் மக்கள்.

 

weather weather

 

குளிர்ச்சியாக இருக்கும் என கடைகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் இரசாயணம் கலந்த கூல்டிரிங்க்ஸ் எனப்படும் குளிர்பானங்களை வாங்கி அருந்துவதால் மேலும் நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். அதேசமயம் இயற்கையான குளிர்பானங்களை, உணவு பொருட்களை உண்பதால் உடல் சமநிலை அடைவதுடன் நோய் தாக்கத்திலிருந்தும் தப்பிக்க முடியும். அதனால் இயற்கையான உணவு பொருட்களை விற்பனை செய்யும் சாலையோர கடைகள் எல்லா ஊர்களிலும் பெருகிவிட்டன.

 

weather

 

weather

 

இளநீர், பனை நொங்கு, தர்பூசனி, வெள்ளரிக்காய், வெள்ளரி பழம் போன்ற இயற்கையான உணவு பொருட்களை விவசாயிகளிடம் நேரிடையாக சென்று குறைந்த விலைக்கு வாங்கி வரும் சிறுவியாபாரிகள் அவைகளை நகர்ப்புரங்களின் சாலையோரங்களிலும், வீதி வீதியாகவும் விற்பனை செய்கின்றனர். உடலுக்கு நல்லது என பொதுமக்களும் அவைகளை விரும்பி வாங்குவதால் விவசாயிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது. இதனால் சூட்டை தணிக்க மக்கள் சாலை ஓரங்களில் முகாமிட்டிருக்கும் இளநீர்,நுங்கு,வெள்ளரிம் மற்றும் பழச்சாறு கடைகளை நோக்கி படையெடுத்துள்ளனர்.

 

இயற்கையான உணவு பொருட்களை உண்பதால் உடல்  நோய்கள் அகல்வதுடன், உள்ளூர் விவசாயிகளுக்கும், சிரு வியாபாரிகளுக்கும் வருவாயும் கிடைக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.