கோவை கண்ணப்பநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ரூட்ஸ் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார்.
இந்த பெட்ரோல் பங்கில் துணி மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து பெண்கள் துணி மாற்றுவதை படம் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர் அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்ததாகவும், இதனால் அவரை நிறுவன ஊழியர்கள் தாக்கியதாகவும் மணிகண்டன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தற்போது மணிகண்டன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.