Skip to main content

மனைவி, மகள்களுக்கு விஷம் கொடுத்த கணவர்... உயிருக்குப் போராடும் இளைய மகள்... 

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

ggggg

 

மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து, தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட தொழிலாளியால், கோவையில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. இதில் விஷமருந்திய இளைய மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரம் ரெப்ரஸ்சி காலனி அமர் ஜோதி நகர் பகுதியில் குடியிருப்பவர் சிவமுருகன் (45). இவருக்கு வைரமணி என்ற மனைவி (40), யுவஸ்ரீ (21), ஹேமலதா (19) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2008 கோவையில் வந்து தங்கி வேலைசெய்து வந்துள்ளார். சிவமுருகன் பால் வியாபாரம் செய்து வந்தார். கரோனா ஊரடங்குக்கு பின்னர் தன் தொழிலை தொடர்ந்து செய்யமடியாமல் வேலையை விட்டுவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 

 

இதனால் அதிகப்படியான கடன் தொல்லைக்கு ஆளான நிலையில், காந்திபுரம் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். தினமும் கடன் கொடுத்தவர்கள் ஃபோன் மூலமாகவும் நேராகவும் இவருக்குக் கொடுத்த கடனைக் கேட்டுள்ளனர். 

 

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்தவர், நேற்று இரவு வீட்டின் அருகே கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து தன் கடனை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். வீட்டில் மனைவி தன் இரு பெண்கள் முன்னர் கடனைக் கேட்டு அவமானப் படுத்தியதால், இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு வாழைப்பழத்தில் விஷத்தை வைத்த சிவமுருகன், மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்துள்ளார். பிறகு அதைத் தானும் சாப்பிட்டுள்ளார்.

 

cnc

 

மேலும், அவருக்குக் கடன் கொடுக்க வேண்டியவர்கள் கடன் கேட்டு தொந்தரவு செய்தவர்கள் என சில விவரங்களை ஒரு நோட்டில் எழுதி வைத்துள்ளார். அதிகாலையில், அலறல் சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் கதவைத் உடைத்துப் பார்க்கும்போது, குடும்பத்தில் 3 நபர்களும் உயரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். கடைசிப் பெண் ஹேமலதா மட்டும், உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் சொல்லிவிட்டு, ஹேமலதாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

அதைத் தொடர்ந்து மூன்று பேரின் உடல்களையும் வடவள்ளி காவல்தறையினர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள் விஷமருந்தி இறந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.