Skip to main content

மளிகை கடைகளை விட மருந்துக்கடையில் குவியும் பொதுமக்கள்

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

 

கரோனாவின் பாதிப்பிலிருந்து பொது மக்களைக் காக்கும் நோக்கில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மளிகை, காய்கறிகள் மற்றும் மருந்துக் கடைகள் மட்டும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

coimbatore

 

 


 

இதனிடையே கோவை  கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம்,   உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க பொதுமக்கள் வீட்டிலிருந்து வருகின்றனர். அங்குள்ள மளிகை கடைகளை விட மருந்து கடைகள் முன்பாக மருந்து வாங்க நூற்றுக்கணக்கான பேர் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
 

ஒவ்வொருவரும்  ஒரு மீட்டர் இடைவெளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரிசையில் சுமார் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக நின்று மருந்துகள் வாங்கி செல்கின்றனர். ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தாலும் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி என்ன காரணத்திற்காகச் செல்கிறார்கள் என்பதும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்பதையும் பரிசோதித்து அனுப்பி வருகின்றனர்.
 


பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்குப் பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் தண்ணீர், பழம், பிஸ்கட் மற்றும் உணவுகளைக் கொடுத்து வருகின்றனர். 
 

அதேபோல் காய்கறி கடைகள் முன்பாக ஆறு கோடுகள் அமைத்து ஒரு மீட்டர் இடைவெளியில் ஆட்களை நிறுத்தி ஒவ்வொருவராக உள்ளே அனுமதிக்க வேண்டும் எனப் போலீசார் ஒலிபெருக்கி மூலம் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

மருந்தகங்களுக்கு சென்னை ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Chennai Collector action order for pharmacies

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் இன்று முதல் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் - 1940 மற்றும் - 1945 அட்டவணை எக்ஸ் (X), எச் (H), எச்1 (H1) மற்றும் டிரக்ஸ் (Drugs) எனக் குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துக் கடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் - 1973 பிரிவு 133இன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்றைய (05.03.2024) நாளில் இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.

இந்த உத்தரவை அமல்படுத்த தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது  உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.