Skip to main content

கோவை ஆயுள்சிறை கைதி மரணத்திற்கு  சிறைத்துறையே காரணம்; நாகை முன்னாள் எம்,எல்,ஏ 

Published on 11/03/2018 | Edited on 11/03/2018
kovai

 

கோவை சிறையில் ஆயுள் சிறைவாசி ரிஜ்வான் பாஷா  மரணம் சிறைத்துறையின் மெத்தனம் என்கிறார் முன்னாள் நாகை எம்.எல்.ஏ எம்ஜிகே நிஜாமுதீன்.  அவர் மேலும்", இன்று காலை கோவை மத்திய சிறையில் ரிஜ்வான் பாஷா என்ற ஆயுள் சிறைவாசி மரணம் அடைந்திருக்கிறார். இவருக்கு வயது சுமார் 40. சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது.  ரிஜ்வான் பாஷா 21 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.

 

முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது அறிவித்த பொது மன்னிப்பில் தனக்கு விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். 2008ம் சுமார் 2000 பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட போது தகுதி இருந்தும் முஸ்லிம் என்ற காரணத்தால் மறுக்கப்பட்டது.

 

இவர் இறந்த பின்பே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவருகிறது. இது சிறையில் போதிய மருத்துவம் கவனிப்பு இல்லாததே இவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம். ஆகவே இவரது மரணத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். இம் மரணம் குறித்து சிறப்பு விசாரணைக்கு அரசு உத்தரவிடவேண்டும் 


        கோவை சிறையில் ஆயுள் தண்டனை  சிறைவாசிகளில் சிறையிலேயே மரணிக்கும் நான்காவது முஸ்லிம்  சிறைவாசி ரிஜ்வான் பாஷா.  இதற்கு முன் தஸ்தகீர், சபூர்ரஹ்மான் மற்றும் ஒசீர் ஆகியோர் மரணத்துள்ளார்கள். 


   அடுத்த சிறைவாசி மரணிக்கும முன் எவ்வித பாரபட்சமும் காட்டாமல் அரசியலமைப்புச் சட்டம் 161ம் பிரிவை  பயன்படுத்தி தமிழக அரசு 19 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அனைவரையும் உடனே விடுதலைச் செய்ய வேண்டும்.  


   அகால மரணமடைந்த ரிஜ்வான் பாஷா குடும்பத்தினருக்கு ரூ25 லட்சம் இழப்பீடும் வழங்கவேண்டும்" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.