Skip to main content

விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுடன் பிடிப்பட்ட நபர்..! காவல்துறை விசாரணை..! 

Published on 29/04/2021 | Edited on 29/04/2021

 

Coimbatore Domestic Airport issue
                                                     மாதிரி படம் 


கரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவிவருகிறது. பல்வேறு இடங்களில் தொற்று பாதித்தவர்களை அனுமதிக்க மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமலும், தொற்று பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் இல்லாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கரோனாவின் இந்த இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. சில மாநில அரசுகள் முழு ஊரடங்கையும், பல மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கையும் வார இறுதியில் முழு ஊரடங்கையும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் பணிபுரிந்துவரும் வட மாநிலத் தொழிலாளர்கள் பலர் கரோனா அச்சம் காரணமாகவும், முழு ஊரடங்கு அமலாகிவிடுமோ என்று அச்சத்தின் காரணமாகவும் தங்களது சொந்து ஊர்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். 

 

இந்நிலையில், நேற்று (28.04.2021) கோவையிலிருந்து டெல்லி செல்ல ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்த ஜோஹிந்தர் குமார் என்பவர் கோவை விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். நேற்று இரவு கோவை விமான நிலையத்திற்கு வந்தவருக்கு அடையாள அட்டை, பயணச் சீட்டு உள்ளிட்ட பரிசோதனைகள் நடந்திருக்கிறது. தொடர்ந்து ‘பை’ சோதனைக்குச் சென்றபோது, அவரது கைப்பையில் நான்கு துப்பாக்கிக் குண்டுகள் இருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பரிசோதனை செய்யும் அதிகாரிகள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

 

தகவல் அறிந்து பிளமேடு காவல் நிலைய காவல்துறையினர் விமான நிலையம் வந்து, ஜோஹிந்தர் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர், ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பதும், கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு பணி அதிகாரியாக இருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர் ஊருக்குச் செல்லும் அவசரத்தில் கைப்பையில் இருந்த துப்பாக்கிக் குண்டுகளை எடுத்து வைக்க மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தன்னிடம் இருக்கும் துப்பாக்கிக்கு முறையான ஆவணங்களை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பீளமேடு காவல்துறையினர் அவரிடம் இருந்த துப்பாக்கியின் ஆவணங்களை சரிபார்த்தனர். அனைத்தும் முறையாக இருந்துள்ளது. தற்போது அவரிடம் மேல் விசராணை நடத்திவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு...’- வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Important information for Velliangiri hill travelers

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இத்தகைய சூழலில் சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.