கோவையில் இளம்பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்தபெண் ஒருவர் மீது அங்கு வந்த மர்ம நபர்ஒருவர் ஆசிட் வீசி உள்ளார். இதனால் அலறி துடித்த இளம்பெண்ணை நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில்அனுமதித்தனர்.
பெண் மீது ஆசிட்வீசிவிட்டு அங்கு இருந்து தப்பிச் செல்ல முயன்ற வாலிபரை அங்கு இருந்த வழக்கறிஞர்கள்மடக்கிப் பிடித்து கோவை மாநகர போலீசில்ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்துஎதற்காகஇந்த சம்பவத்தில் ஈடுபட்டார்என விசாரித்து வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்டவிசாரணையில், ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணும்இவரும் கணவன், மனைவி எனத்தெரியவந்துள்ளது.நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.