ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் பணத்தை கொடுத்து ஆவின் வாடிக்கையாளர் அட்டையை பெற்றுள்ளார். அதை தொடர்ந்து பொருட்கள் வாங்குவதற்காக அன்பழகன் வடவள்ளி ஆவின் பூத்திற்கு சென்றுள்ளார். அப்போது தனது ஆவின் வாடிக்கையாளர் அட்டையை, ஆவின் பூத்தின் அதிகாரிகளிடம் கொடுத்தார். அதனை பெற்று கொண்ட அதிகாரிகள் வாடிக்கையாளரின் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்த்துள்ளனர். ஆனால் அவர்கள் வைத்திருந்த பைலில் இவரது பெயர் இல்லை. அதை அன்பழகனிடம் அதிகாரிகள் கூறினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அன்பழகன் இழப்பீடு கேட்டு கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

coimbatore consumer court warrant to Managing Director of Awin!

Advertisment

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019- ஆம் ஆண்டு ஜூலையில் இழப்பீடு வழங்க ஆவின் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் ஆவின் நிறுவனம் சம்மந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு இழப்பீடு தராததால், ஆவின் நிர்வாக இயக்குனருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோவை மாவட்டம் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.