Skip to main content

விருத்தாசலம் பகுதி விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் பயிற்சி!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அங்ககத்துறை சார்பில் கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம், கார்மாங்குடி கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை முறையில் பயிரிடும் நுட்பங்கள் குறித்து மூன்றாவது கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.  

 Coimbatore Agricultural University professors training farmers


இப்பயிற்சியில் மண்புழு எரு, பூச்சிவிரட்டி, இயற்கை களைக்கொல்லி, மீன் அமினோ கரைசல், வேப்பங்கொட்டை சாறு மற்றும் இஞ்சி பூண்டு கரைசல் தயாரித்தல், போன்றவை குறித்தான பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கோவை வேளாண் பல்கலைக்கழக அங்ககத்துறை தலைவர் பேராசிரியர் சோமசுந்தரம், பேராசிரியர் ஜான்சிராணி, பேராசிரியர் கணேசன்,  பேராசிரியர் சுனிதா மற்றும் உழவர் மன்ற தலைவர்  கார்மாங்குடி வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மேற்கண்ட பயிற்சிகளை விவசாயிகளுக்கு அளித்தார்கள். இறுதியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மண்புழு எரு தயாரிக்கக்கூடிய இடு பொருட்களான மண்புழு, பாலிதீன் தொட்டி ஆகியவை வழங்கப்பட்டது.

 Coimbatore Agricultural University professors training farmers


இறுதியாக வருகிற டிசம்பர் 3 மற்றும்  4- ஆம் தேதிகளில் கோவை வேளாண் பல்கலை கழகத்தை நேரில் பார்வையிட அழைத்துச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. பயிற்சி நிறைவாக உழவர் மன்ற உறுப்பினரும், முன்னோடி விவசாயியான முத்து.பன்னீர்செல்வம் நன்றி கூறினார். பிறகு பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளின் நெற்பயிர்களை பேராசிரியர் குழுக்கள் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்கள்.

 




 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.