Skip to main content

தொடர் வீழ்ச்சியை சந்திக்கும் தேங்காய் உற்பத்தியாளா்கள்...

Published on 01/05/2021 | Edited on 01/05/2021

 

 Coconut growers facing continuous decline ...

 

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தானே புயல், கஜா புயல், ஒக்கி புயல் என பல புயல்களால் லட்ச கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து தேங்காய் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. தஞ்சை, பேராவூரணி, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தென்னை உற்பத்தியானது செய்யப்பட்டு வரும்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு தேங்காய் ரூ.40, 50 என்று விற்பனை செய்யப்பட்டது. அதற்கு காரணம் தேங்காய் உற்பத்தி முழுவதும் சரிந்துபோனதால் இந்த விலையேற்றம்.

 

ஆனால் கடந்த ஆண்டு தேங்காய் நல்ல உற்பத்தியை எட்டியநிலையில், தென்னை மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, விவசாயிகள் தேய்காய் சாகுபடி செய்து இதற்கு முன் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முயன்ற நிலையில், கடந்த 2020ல் கரோனா நோய் தாக்கம் மிகப்பெரிய அளவில் தேங்காய் உற்பத்தியாளா்களுக்கான வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்தது. கரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் பொது முடக்கங்களால், திருமணம் உள்ளிட்ட பல சுப நிகழ்ச்சிகள், சிறிய அளவில் இருந்து பெரிய அளவிலான உணவகங்கள் வரை அனைத்தும் முடங்கியதால் தேங்காய் விற்பனை முற்றிலும் நலிவடைந்தது.

 

 Coconut growers facing continuous decline ...

 

தமிழக அரசானது கடந்த 6 மாத காலங்களாக கொஞ்சம் கொஞ்கமாக அறிவித்த சில தளா்வுகளால் உணவகங்கள் முழுமையாக திறக்கப்பட்டது. எனவே தேங்காய்க்கு ஒரு நல்ல விலை கிடைத்தது. ஒரு தேங்காய் 20 முதல் 25 வரையிலான விலை அவா்களுக்கு திருப்தி அளித்தது. கடந்த 6 மாத காலமாக தேங்காய்க்கு ஒரு நல்ல விலை கிடைத்து கொண்டடிருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியா முழுவதும் கரோனாவின் இரண்டாவது அலை வீச ஆரம்பித்துள்ளது.

 

குறிப்பாக தமிழகத்தில் 2வது அலை வீச ஆரம்பித்து அசுர வேகத்தில் நோய் தொற்று பரவி வரும் நிலையில், மீண்டும் தேங்காயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அரசும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும் நிலையில், தற்போது தேங்காயின் விலை சரிவை சந்திக்க ஆரம்பித்துள்ளது. ஒரு தேங்காய் இன்று ரூ.12 அல்லது 10 ரூபாய்க்கு குறைந்துள்ள நிலையில், உற்பத்தியாளா்களும் பெரிய பாதிப்பை சந்தித்து உள்ளனா். உற்பத்தி அதிகம் இருந்தும் ஒருவிலை கிடைக்காமல் தொடர்ந்து 3 வது வருடமாக இந்த விலை வீழ்ச்சியையும், வாழ்வாதாரமும் கேள்விகுறியாகி உள்ளது. எனவே அரசு விவசாய உற்பத்தி பொருட்களை நல்ல விலை நிர்ணயம் செய்து வாங்கிகொள்ள வேண்டும் என்றும்,உள் நாட்டு ஏற்றுமதிக்கு கட்டுபாடுகள் இல்லாமல் கொண்டசெல்ல உதவிட வேண்டும் என்றும் கேட்டுகொள்கின்றனா்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.