Skip to main content

இலங்கைக்கு மஞ்சள் கடத்தியவர்களை மடக்கிப் பிடித்த கடலோர காவல்படையினர்!!

Published on 28/06/2021 | Edited on 28/06/2021
Coast Guard arrests turmeric smugglers in Sri Lanka

 

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து படகில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,500 கிலோ மஞ்சள் சிக்கியது. கடத்தலுக்குப் பயன்படுத்திய மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர். இலங்கையில் விரளி மஞ்சள், பீடி இலை மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் தமிழ்நாட்டின் விரளி மஞ்சள் உள்ளிட்ட பொருட்களைக் கடத்திச் சென்று பல மடங்கு லாபம் சம்பாதித்துவருகின்றனர். கடந்த 6 மாதங்களில் மஞ்சள், சிகரெட் பாக்கெட்டுகள், பீடி இலைகள் ஆகியவை கடத்த முயற்சிகள் நடந்தன.

 

தூத்துக்குடி மரைன் காவல்படையிடம் பிடிபட்ட சம்பவங்கள் 10க்கும் மேல் நடந்துள்ளன. இந்நிலையில், தூத்துக்குடி மரைன் போலீஸ் எல்லைக்குட்பட்ட மீனவர் காலனி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு மஞ்சள் உள்ளிட்ட பெருட்கள் கடத்தப்படுவதாக மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மீனவர் காலனி கடல் பகுதியில் இன்ஸ்பெக்டர் சைரஸ், எஸ்.ஐ. ரென்னிஸ், தனிப்படை எஸ்.ஐ. ஆசைத்தம்பி உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் ரோத்து சென்றனர். அப்போது கடற்கரையில் நின்றிருறந்த மினி லாரி மற்றும் படகை சுற்றி வளைத்தனர். போலீசாரைக் கண்டதும் படகில் வந்தவர்கள் கடலுக்குள் குதித்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் விரட்டிச் சென்று 5 பேரை மடக்கினர்.

 

Coast Guard arrests turmeric smugglers in Sri Lanka

 

விசரணையில் அவர்கள், கீழ்வைப்பாறைச் சேர்ந்த அருண் மகன் ராபிஸ்டன் (21) ஜே.க மகன் விதுஸ்டன்(20), அருள்(55), தூத்துக்குடி சிலுவைப்பட்டி இந்திரா நகர் ஈஸ்வரன் மகன் கோவிந்த பெருமாள் (36), தானமுத்து நகர் சுனாமி காலனி மந்திரமூர்த்தி மகன் சேர்மராஜா (19) என்பது தெரியவந்தது. மேலும் படகு, 30 கிலோ எடை கொண்ட 84 மஞ்சள் மூட்டைகள், மினி லாரி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சிக்கிய 2,500 கிலோ மஞ்சளின் மதிப்பு ரூ. 2.50 லட்சம் ஆகும். இந்த மஞ்சள் மூட்டைகள் கடத்தலில் தொடர்புடைய மைதீன் என்பவரை மரைன் போலீசார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.