Skip to main content

பயோமெடிக்கல் கழிவுகளை கொட்டிய மருத்துவமனைக்கு 10 லட்சம் அபராதம் –பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

வேலூர் மாநகராட்சி காட்பாடியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பசுமை தீர்ப்பாயத்துக்கு ஒரு புகார் மனு அனுப்பினர். அதில் குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பூங்காக்குள் தொட்டி அமைத்து மாட்டு சாணத்தை பயன்படுத்தி குப்பைகளை எருவாக்கும் திட்டத்தை செயல்படுத்துகின்றனர். இதனால் மீத்தேன் வாயு அதிகமாக வெளியாகி கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தி அதிகமாகி குடியிருப்புவாசிகளுக்கு பல நோய்களை உருவாக்குகிறது என மாநகராட்சி மீது புகார் தெரிவித்துயிருந்தனர்.

 

VELLORE


அந்த புகார் மற்றும் வேறு சில புகார்களை விசாரணை நடத்த பசுமை தீர்ப்பாயத்தின் சென்னை மண்டல தலைவரும், நீதிபதியுமான ஜோதிமணி வேலூர்க்கு வருகை தந்திருந்தார். அவர் புகார் சொல்லப்பட்ட இடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் சென்று நேரடியாக ஆய்வு செய்து, மக்கள் சொன்ன குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதை அறிந்து, அதனை உடனே மாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஜோதிமணி, காட்பாடி செஞ்சிகிருஷ்ணாபுரம் என்கிற கிராமத்தின் ஏரிக்கரையோறம் சி.எம்.சி மருத்துவமனை, ஆபத்தான சுகாதார சீர்கேடுகளை அதிகளவில் உருவாக்கும் உயிருக்கு ஆபத்தான மருத்துவ கழிவுகளை ( பயோமெடிக்கல் ) கொட்டிவிட்டு சென்றிருந்தது தொடர்பாக புகாரை விசாரித்து அந்த மருத்துவமனைக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளோம்.

இதேபோல் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் பாதுகாப்பற்ற முறையில் பயோமெடிக்கல் கழிவுகளை கொட்டுவதாக புகார் வந்துள்ளது. அதனை விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். அரசு மற்றும் தனியார் துறை என யாராக இருந்தாலும் சுகாதார சீர்கேடு மற்றும் மக்களுக்கு ஆபத்தான வேலைகளை செய்தாலும் அது தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அப்போதுதான் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள், மக்கள் பாதுகாப்புடன் இருக்கப்பார்கள் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.