இந்த நிலையில் மழை பாதிப்பு காரணமாக மாநில முழுதுவம் நாளை நடைபெறுவதாக இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ளத்தால் பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு செவ்வாய் கிழமை அன்று வழங்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதி நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் புதன்கிழமை முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரையாண்டு தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை வெளியிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக அரையாண்டு தேர்வு கடந்த 7 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மழை பாதிப்பின் காரணமாக 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடக்க இருந்த தேர்வுகள் மட்டும் தள்ளிவைக்கப்பட்டு மற்ற தேர்வுகள் நாளை முதல் தொடங்குவதாக இருந்தது. இந்த நிலையில்தான், மற்ற மாணவர்களை போல், புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று நாளை நடைபெறவுள்ள தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.